Breaking News

2017ம் ஆண்டு வருத்தமளிக்கும் ஆண்டு

எதிர்வரும் புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

நாட்டின் வளங்கள் விற்கப்படுவதனால் இந்நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலரை சந்தித்து நலம் விசாரித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அத்துடன், அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் அனைத்து மாகாண சபைகளிலும் தோல்வியடையும் என்று, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.