Breaking News

எழுக தமிழை ஏன் குழப்புகின்றீர்கள் -வியாளேந்திரன் எம்.பி. கேள்வி(காணொளி)

தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கா
மேற்கொள்ளும் போராட்டங்களை தென்னிலங்கையில் நடைபெறும் இனவாத போராட்டங்களுடன் இணைத்துப்பேசும் தமிழ் தலைமைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் நடாத்தும் போராட்டங்களில் பங்கேற்கவேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஏற்கனவே எழுக தமிழ் நிகழ்வு 21.01.2017 இல் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது பின்னர் தமிழரசு கட்சியின் பொங்கல் விழா நாளை நடைபெறுவதாலும் எழுக தமிழ் நாளான அன்று பாடசாலை தினமாக அறிவிக்கப்பட்டதாலும் அது 28.01.2017 இற்கு பிற்போடப்பட்டுள்ளது.



இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் த.ம.பேரவை இணைத்தலைவர் வசந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமுன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கே.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், எழுக தமிழ் என்பது மக்கள் எழுச்சி நிகழ்வு. இதனை தமிழ் மக்கள் பேரவை செய்தாலும் வேறு யார் செய்தாலும் அதனை ஆதரிக்க வேண்டும் இந்த மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் கொந்தளித்த நிலையில் உள்ளனர்.  இதனை ஏன் சில தலைவர்கள் குழப்புவதாக சொல்கின்றனர் அவ்வாறு குழப்புவதாக சொல்பவர்கள் எதிர்காலத்தில் மட்டக்களப்பில் நடைபெறும் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் அதிர்ப்தியுடனும் விரக்தியுடனும் உள்ளனர். இந்த வருட ஆரம்பித்திலேயே மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர். பாடசாலை மாணவர்கள் கூட வீதியோரத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் செய்யும் நிலையேற்பட்டுள்ளது.

ஜனவரி 01ஆம் திகதி தொடக்கம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலையுள்ளது. இவ்வாறான நிலையில் இவ்வாறான எழுச்சிப்பேரணிகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும்போது அவர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் கால்நடைகள் சுடப்படுகின்றது. களவாடப்படுகின்றது. இவ்வாறு பல பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களுக்கு ஆதரவு வழங்குவதாகவே இவ்வாறான எழுச்சிப்பேரணிகள் இருக்கின்றது. எழுக தமிழ் நிகழ்விற்கு எதிர்ப்பானது மக்கள் மத்தியில் இல்லை. இன்று தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றது.

தென்னிலங்கையில் எங்காவது இராணுவம் காணியை அபகரித்துள்ளதா?, யாராவது காணாமல் ஆக்கப்பட்டுள்ளது தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுகின்றதா? அங்கு நடைபெறுவது ஆட்சியை கைப்பற்றுவதற்கான குழப்பம். ஆனால் இங்கு செய்வது ஆட்சியை பிடிப்பதற்கான செயற்பாடுகள் அல்ல. எமது மக்களின் நியாயமான நீதியான உரிமையினை கேட்டே போராடுகின்றோம்.

தென்னிலங்கையில் நடைபெறும் இனவாத குழப்பத்தினையும் தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்கா மேற்கொள்ளும் போராட்டங்களையும் இணைத்துப்பேசும் தமிழ் தலைமைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் நடாத்தும் போராட்டங்களில் பங்கேற்கவேண்டாம்.

தொடர்புடைய முன்னைய செய்திகள்






முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்