Breaking News

அதிகாரங்களை அரசாங்கத்திடம் தட்டிப் பறிக்க வேண்டும் என்கிறார் செல்வம் எம்.பி!

அதிகாரங்களை யாரும் தரமாட்டார்கள், நாங்கள்தான் தட்டிப் பறிக்க வேண்டும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


கவிஞர் ஜீ.எம்.பரஞ்சோதி எழுதிய ‘நாங்கள் விட்டில்கள் அல்ல’ நூல் வவுனியாவில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்திருந்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,

“அதிகாரம் என்பது நாங்கள் என்பது தட்டிப் பறிக்க வேண்டியது. தருகிறார்கள் இல்லை தருகிறார்கள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. நாங்கள் எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றோம்.

எல்லோருக்கும் தெரியும் அவர்கள் தரமாட்டார்கள் என்று, எனவே நாங்கள்தான் அதிகாரங்களை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். எங்களிடம் மாகாண அரசு இருக்கின்றது. இதனை வைத்துக் கொண்டு என்ன செய்கின்றோம். இதனை காத்திரமானதாக இயக்காமல் இருப்பது யாருடைய தவறு?”  என்று தெரிவித்துள்ளார்.