Breaking News

வீடு வேணுமெண்டால் போராட்டத்திற்கு வாங்கோ!(காணொளி)


“வீடுவேணும் என்டா போராட்டதிற்கு வாங்கோ”
என மிரட்டியே தங்களை நல்லூரில் நடைபெற்ற போராட்டதிற்கு அழைத்து வந்ததாக பொதுமக்கள் தெரிவிப்பு

இன்றைய தினம் பிற்பகல் 3.00மணியளவில் திருமாவளவன், வேல்முருகனை கண்டித்தும் ரஜனிக்கு ஆதரவு தெரிவித்தும் ஈழத்து கலைஞர்கள் என்று கூறப்பட்ட நபர்களால் நல்லூரில் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இவ் ஆர்பாட்டதில் வவுனியா, ஊர்காவற்துறை மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு போராட்டதிற்கு வந்தாலே வீடு தரப்படும் என சொல்லியே அழைத்து வரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

மேலும் இவ் ஆர்பாட்டம் முன்னாள் மாநகர சபை உறுப்பினரின் மேற்பார்வையிலே நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

வரவழைக்கப்பட்ட இளைஞர்களில் பலர் ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டு பொலீஸ்நிலையங்களுக்கு சென்றவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.









தொடர்புடைய முன்னைய செய்தி

ரஜனிக்காக காத்திருந்த கறுமங்கள் ஆர்ப்பாட்டம்-வா தலைவா! வா!


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்