Breaking News

தமிழ்த் தலைமைகள் போலியான பிரச்சாரம் என - அருண் தம்பிமுத்து (காணொலி)

நிரந்தரத் தீர்வைக் காணப்போகின்றோம் என்ற போலியான பிரச்சாரங்களை முன்னெடுத்த தமிழ்த் தலைமைகள் அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளரான அருண் தம்பிமுத்து விவரித்துள்ளார். 

தொடர்ச்சியாக மூன்று தடவைகளி லும் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவை வழங்கியதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைப் போன்ற வேறு தலைவர்கள் இருக்க முடியாதெனத் தெரிவித்துள்ளார்.  

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் ஆரம்பி க்கப்பட்ட ’எளிய’ (எதிர்பார்ப்புக்களை ஒளியேற்றும் ஒளி) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்றவேளை இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அருண் தம்பிமுத்து இவ்விடயத்தை விவரித்துள்ளார்.