Breaking News

மரம் முறிந்து வீதி தடையா ? தாமதமின்றி தொடர்பு கொள்க - கொழும்பு மாநகர சபை

மரங்கள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்துக்கு தடையானால் தமது அவசர அழைப்புக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு கொழும்பு மாநகர சபை பொதுமக்களிடம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையையடுத்து கொழும்பின் பல பாகங்களிலும் மரங்கள் முறிந்து விழு ந்து போக்குவரத்துக்கள் பாதிக்கப்ப ட்டுள்ளன. 

இந்நிலையில் கொழும்பு மாநாகர சபை அவசர தொலைபேசி இலக்க ங்களை பொதுமக்களின் நன்மை கருதி தெரிவித்துள்ளது. மேலும் மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக 0777 313247 மற்றும் 110 என்ற தொலைபேசி இலக்க ங்களுக்கு தொடர்புகளை மேற்கொண்டு தெரிவிக்குமாறு கொழும்பு மாநகர சபை பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.