ஜனாதிபதி தலைமையில் 100 சீன ஜோடிகளுக்கு இலங்கையில் திருமணமாம் !
இலங்கை – சீன உறவு மேலும் பலமடையும் வகையில் 100 சீன திருமண ஜோடிகளுக்கு இலங்கையில் திருமணம் ஈடேறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரே சாட்சிக் கையொப்பமிட்டு இந்த திருமணத்தை நடத்தி வைக்கவுள்ளார். இலங்கை – சீன உறவில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தவே இந்த நிகழ்வு இடம்பெறுவதாக அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை சுற்றுலாத்தறை அமைச்சு இணைந்து நேற்று பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்து ள்ளார்.
மேலும் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கை மற்றும் சீன நாடுகளின் உறவு முறையானது மிக நீண்டகால தொடர்பைக் கொண்டது.
இரு நாடுகளும் நல்லதொரு நட்புறவினை கையாண்டு வருகின்றன. அதே போல் பெளத்த மத உறவிலும் இரண்டு நாடுகளுக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இலங்கை மன்னர்கள் சீன பெண்களை திருமணம் செய்து உள்ளனர்.
இந்நிலையில் தற்போது இரு நாடுகள் மத்தியில் மிகவும் நெருக்கமான வர்த்தக மற்றும் வியாபார உறவுமுறை பலமடைந்துள்ளன.
அத்துடன் சுற்றுலாத்துறையும் மிகவும் பலமடைந்து காணப்படுகின்றது. இலங்கையின் சுற்றுலாத்துறையில் சீன சுற்றுலா வாசிகளின் பங்களிப்பே அதிகமாகும்.
உலகில் அதிக சுற்றுலாக்களை மேற்கொள்ளும் நபர்களாகவும் சுற்றுலா செல்ல அதிகளவில் செலவீனம் செய்யும் நபர்களாகவும் சீனர்கள் உள்ளனர். ஆகவே இலங்கையில் மேலும் சுற்றுலாத்துறையை பலப்படுத்தும் நோக்கத்திலும் இரண்டு நாடுகளின் நட்புறவு மேலும் பலமடையும் வகையிலும் அடு த்த மாதம் 17 ஆம் திகதி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் 100 சீன திருமண ஜோடிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அனைவருக்குமான சாட்சிக் கையொப்பத்தை இடவுள்ளார். இந்திய திருமண தம்பதியினர் ஆரம்பத்தில் இருந்தே இல ங்கையில் தமது திருமண நிகழ்வுகளை முன்னெடுக்கும் சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டவாறு உள்ளன.
எனினும் சீனர்கள் இலங்கையில் திருமணம் செய்துகொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஆகவே 17 ஆம் திகதி காலை விகாரமகாதேவி பூங்காவில் திருமணம் இடம்பெறுவதுடன் பின்னிரவு பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இரவு விருந்து நிகழ்வும் அதனுடன் கூடிய இசை, கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
அத்துடன் 17 ஆம் திகதியில் இருந்து 22 ஆம் திகதி வரையில் அவர்கள் இலங்கையின் புராதான, பாரம்பரிய, சுற்றுலா பகுதிகளை சென்று பார்வையிடவும் தமது திருமண நாட்களை இனிதாக கொண்டாடவும் சகல ஏற்பாடுகளும் இல ங்கை சுற்றுலாத்துறை அமைச்சு செய்துள்ளது.
22 ஆம் திகதி மீண்டும் சீனா நோக்கி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளன. சீனா அரசாங்கத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட நூறு ஜோடிகளே இவ்வாறு இலங்கையில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இதில் அவர்க ளின் அரச குடும்பத்தை சேர்ந்த ஒரு திருமண ஜோடியும் உள்ளது என்பது விசேடமான அம்சமாகுமெனத் தெரிவித்துள்ளார்.