Breaking News

சாரதிகளுக்கான வேண்டுகோள் எச்சரிக்கை !

இலங்கைக்கு தென்மேற்குக் கடலில் உண்டாகியிருக்கும் காற்றழுத்தம் கடும் தாழமுக்கமாக மாறியுள்ளது. கொழும்புக்கு சுமார் 200 கிலோமீற்றர் தொலை விலுள்ள இத்தாழமுக்கம் மேலும் வலுப்பெற்று இலங்கையைக் கடந்து அரே பியக் கடல் பிராந்தியத்தை அடையவிருக்கிறது. 

இதனால், இன்று முழுவதும் தற்போ தைய சீரற்ற காலநிலையே தொடரு மென வானிலை அவதான நிலை யம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அதி வேக வீதியில் பயணிக்கும் வாகன ங்களை 60 கிலோமீற்றர் வேகத்தில் செலுத்துமாறு சாரதிகளுக்கு வீதி அபி விருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், வாகனங்களுக்கிடையில் சுமார் 50 மீற்றர் அளவில் இடைவெளியை பேணுமாறு அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, வாகனத்தின் முன்பக்க விள க்கை எரிய விட்டு வாகனத்தைச் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.