Breaking News

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கந்து வட்டிக் கருத்து.!

தயாரிப்பாளர் அசோக் குமார் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில். சினிமாவில் தயாரிப்பாளர்களின் வேதனைகள் மக்களுக்கு புரிய வந்துள்ளது. 

அந்த வகையில் பல நடிகை மற்றும் நடிகர்கள் இது குறித்து அசோக்குமா ருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். இது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சென்னை யில் இருந்து புதன்கிழமை மதுரை சென்றபோது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரியப்படுத்துகையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவி த்துள்ளார். 

சினிமா உலகத்தைப் பொறுத்தவரை கந்து வட்டி கிடையாது. அதிக வட்டி வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக 2003-ஆம் ஆண்டே கந்து வட்டி சட்டம் வந்து விட்டது. கந்து வட்டி இருக்கும் பட்சத்தில் அதுதொடர்பாக புகார் அளித்திருக்கலாம்.