Breaking News

இவ் வருடத்திலாவது தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்! (காணொளி)

வடமாகாண முதலமைச்சர் நிதியம் மற்றும் அமைச்சுக்களின் செயலாள ர்கள் மாற்றம் ஆகிய விடயங்களில் துரித நடவடிக்கையை முன்னெடுக்கு மாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இக் கோரிக்கை யினை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வடமாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் முன்வைத்ததுடன் இவ் வருடத்திலாவது தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனக் கேட்டு ள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் 3 வருட நிறைவினை கொண்டாடும் நிகழ்வு வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந் நிகழ்வில் கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் வடக்கு மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாண வர்களைக் கௌரவித்து பதக்கங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவநேசன்,குணசீலன், சர்வேஸ்வரன் உட்பட மாகண சபை உறுப்பி னர்கள் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எனப் பலரும் கல ந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வ ரன் வடமாகாணசபையின் 5 வருடங்கள் நிறைவடையும்  நிலையில் கடந்த வருடங்களில் தாமதப்படுத்தப்பட்ட விடயங்களை இவ்வாண்டிலாவது நடை முறைப்படுத்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென  வலியுறுத்தியுள்ளார்.