பேக் ஐடி வைத்திருப்போர்க்கு பேஸ் புக் நிறுவனத்தின் அதிர்ச்சி நடவடிக்கை!
இலங்கையிலுள்ள போலியான பேஸ்புக் கணக்குகளை நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கனணி அவசர பிரிவின் பிர தான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா அறிவிப்பு விடுத்துள்ளாா்.
இதன்படி, 529 பேஸ்புக் கணக்குகளை இவ் வருடத்தின் முதல் 2 மாதங்களி லும் முற்றாக முடக்குவதற்கு தீர்மா னிக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப் பட்டுள்ளது.
பேஸ்புக் கணக்குகள் மூலம் நிதி மோசடியில் ஈடுபடுதல், போலி கணக்குகளை ஆரம்பித்தல் போன்ற பல குற்றச் செயல்களை கரு த்திற்கொண்டே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளாா்.
இவ் விடயங்கள் குறித்து தமக்கு ஏராளமான முறைப்பாடுகள் பதிவாகியதா கவும், இவ்வாறான முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடு க்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், கடந்த வருடத்தில் மாத்திரம் 3,600 பேஸ்புக் கணக்குகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்து ள்ளாா்.