Breaking News

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் நடைபெறும் பாரிய நிதி மோசடி தொடர்பில் சுங்க பிரிவு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த மோசடிகள் பேஸ்புக் ஊடாக தொடர்ந்தும் இடம்பெறுவதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள ங்கள் ஊடாக லொத்தர் சீட்டினால் பல் வேறு பரிசுகள் கிடைத்துள்ளாதாக இலங்கை யர்களுக்கு அறிவிக்கப்படு வதோடு சுங்க பிரிவு ஊடாக அந்த பரிசு பொருட்களை அனுப்புவதற்கு பணம் பெற்று கொள்ளும் மோசடியில் சிக்கிக் கொள்ள வேண்டாமென இலங்கை சுங்க திணைக்களம் பொது மக்க ளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த காலங்களில் வெளிநாட்டில் வசிப்பதாக கூறி வெற்றியாளர்களுக்கு கிடைத்துள்ள பரிசினை அனுப்புவதாக கூறி பாரிய அளவு பண மோசடியில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் சுங்க பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைத் துள்ளன. 

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல்வேறு குழுக்கள் இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் ஊடாக லொத்தர் பரிசு கிடைத்துள்ளதாக கூறி இலங்கை தொலைபேசி இலக்கத்திலி ருந்து அழைப்பினை ஏற்படுத்துவதோடு. 

இப் பரிசினை விடுவித்து கொள்வதற்காக சுங்க பிரிவிற்கு பணம் செலுத்த வேண்டுமென வங்கிக் கணக்கு ஒன்றை வழங்குகின்றனர். இதனால் ஏமாற் றம் அடைந்த பலர் பெருந்தொகை பணத்தை அந்த வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். 

இந்த மோசடிகளில் சிக்கி இலங்கையர்கள் பலர் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் 0112 47 14 71 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை சுங்க திணைக்கள விசாரணை பிரிவுக்கு அறிவிக்க முடியுமென சுங்க பிரிவு இயக்குனர் தெரிவித்துள்ளாா்.