Breaking News

புதிய அமைச்­ச­ர­வை நியமனத்தில் ஜனா­தி­பதியின் அதிரடி தீா்வு....!

நாட்டு மக்கள் நம்­பிக்கை வைக்­கக்­கூ­டிய வகை­யி­லான புதிய அமைச்­ச­ர­வையை உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன். புதிய அமைச்­ச­ர­வையை நிய ­மிக்­கும்­போது அமைச்சுப் பதவி வழங்­கப்­ப­டு­கின்­ற­வர்­களின் சர்­வ­தேச பிர­தி­ப­லிப்பு குறித்து பரி­சீ­லிக்­கப்­படுமென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வி த்­துள்ளார். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன லண்­ட­னுக்கு சென்­றி­ருந்­த ­போது அங்கு  சிங்­கள செய்தி சேவைக்கு நேற்று முன்தினம் வழங்­கிய செவ்­வி­யி­லேயே இவ் விட­யத்தை தெரிவித் துள்ளாா். 

 மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

புதிய அமைச்­ச­ர­வைக்கு அமைச்­சர்­களை நிய­மிக்­கும்­போது அவர்­களின் உள்­நாட்டு நிலைமை மட்­டு­மன்றி சர்­வ­தேச பிர­தி­ப­லிப்பு குறித்தும் ஆரா­யப்­படும். அண்­மையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பத­விக்­கான நிய­ம­னத்­தின்­போது சர்­வ­தேச நிலை­மை­க­ளையும் பார்க்­க­வேண்­டிய தேவை எனக்கு இருந்­தது. எந்­த­வொரு விட­ய­மா­னாலும் ஒரு அமைச்­சரை நிய­மிக்­கும்­போது அவர் சர்­வ­தேச ரீதி­யிலும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­ப­வ­ராக இருக்­க­வேண்டும். 

தற்­போது அமைச்­ச­ரவை மாற்றம் இடம்­பெ­றப்­போ­வ­தில்லை. மாறாக புதிய அமைச்­ச­ர­வையை உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன். நாட்டு மக்கள் நம்­பிக்கை வைக்­கக்­கூ­டிய வகை­யி­லான புதிய அமைச்­ச­ர­வையை உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன் என்றார். 

இதன்­போது புதிய அமைச்­ச­ரவை அமைச்­சர்­களின் எண்­ணிக்கை குறித்து பி.பி. சி. செய்­தி­யாளர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதற்கு இன்னும் ஒரு­வார காலம் உள்­ளதாகத் தெரிவித்துள்ளாா்.

மேலும் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாகி பதவி விலக்­கப்­பட்ட அமைச்­சர்­களை மீண்டும் நிய­மிப்­பதா இல்­லையா என்­பது குறித்து அர­சியல் கட்­சி­களே தீர்­மா னம் எடுக்கவேண்டும். நான் இம்முறை அமைச்சர்களை நியமிக்கும்போது அவர் அந்த பதவிக்கு தகுதியானவரா என்பது குறித்து தேடிப்பாரப்பேன். அதன் படி மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையிலான அமைச்சரவையை நியமிப் பேன் எனத் தெரிவித்துள்ளாா்.