Breaking News

யாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் ஒழிக்கப்பட வேண்டும் - முதலமைச்சா்.!

கொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் விவரித்துள்ளாா்.  


“யுத்தம் நிறைவடைந்துள்ள நிலை யில், யுத்த அழிவுகளின் நினைவு களை மக்களுக்கு மீள நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வடக் கிலுள்ள இராணுவ நினைவுச் சின் னங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மக்கள் தற்போதுதான் தமது கொடிய அழிவுகளின் விளைவுகளையும் அத னால் ஏற்பட்ட தாக்கங்களையும் மெல்ல மெல்ல மறந்து வருகின்றனர். இந் நிலையில் வடக்கு மக்களுக்கு அவசியமற்றதும் யுத்த வடுக்களின் நினைவு களை மீள நினைவூட்டுவதுமான அந்த நினைவுகளை எமது பிரதேசங்களில் குறிப்பாக வடக்கில் வைத்திருக்கவேண்டிய தேவையில்லை.

யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகின்றபோதும் இவ்வாறான நினைவுச் சின் னங்கள் இங்கு காணப்படுவது தொடர்ந்தும் மக்களின் மனங்களில் வேதனை யையும் கொடிய நினைவுகளையும் ஏற்படுத்தும். 

எனவே நாட்டின் ஜனாதிபதி என்ற வகையின் இவ்வாறான செயற்பாடுகளை கவனத்திற்கொண்டு குறித்த இராணுவ நினைவுச் சின்னங்களை அகற்றுவ தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மேலும் அக்கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளாா்.