Breaking News

வட மாகாண 130 ஆவது அமர்வில் அனந்தி மீது குற்றச்சாட்டு.!

வடமாகாணசபை தொடர்பில் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அனந்தி சசிதரன் மீது வடமாகாண சபையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட் டுள்ளதுடன், அவர் சிறப்புரிமையை மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண் டபத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடை பெற்ற போது அவை தலைவர் மேற்படி விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளாா். 

 மேலும் தெரிவிக்கையில்....,

வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு சென்று திரும்பிய மாகாணசபை உறுப்பினர் அமைச்சர் என கூறும், அனந்தி சசிதரன் கடந்த 25 ஆம் திகதி பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் வடமாகாண சபை யில் நடந்த பல கூட்டங்களில் கூச்சல் குழப்பங்களாக இருந்ததாகவும், மக்க ளால் விமர்சிக்கப்படும் சபையாக வடமாகாணசபை மாறியுள்ளதாகவும், தற் போது சபை பொழுதுபோக்கு மற்றும் சண்டை பிடிப்பதற்கான சபையாக மாறி யுள்ளதாகவும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வுக்கும் தான் செல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளாா். 

அமர்வுகளை நடத்தி நிதி வீண் விரயம் செய்யப்படுவதாகவும் அவைத் தலை வர் தான் நினைத்தால் போல் பிரேரணைகளை கொண்டு வருவதுடன், நாங்கள் பிரேரணை கொண்டு வந்தால் 15 நாட்களுக்கு முன்னர் கொண்டு வரவேண்டு மெனக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளாா். 

இச் செய்தியில் அனந்தி சசிதரன் பாரதூரமான கருத்துக்களை தெரிவித்துள் ளார். வெடுக்குநாறி மலையை யாத்திரிகர் தலமாக பிரகடனப்படுத்தும் தீர்மா னம் வடமாகாண சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் 15 நாட்களுக்கு முன்னர் பிரேரணைகளை தரவேண்டும் என நான் எங் கும் கூறவில்லை. மேலும் 10 நாட்களுக்கு முன்னர் பிரேரணைகளை தர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனையினையும் நான் அதிகம் கடைப்பிடிப்பதில்லை. 

குறிப்பாக இனப்படுகொலை தீர்மானம் இந்த மாகாணசபையில் நிறைவேற் றப்பட்டது. அது அன்றைய சபை அமர்வு அன்று காலையே முதலமைச்சரால் எனக்கு வழங்கப்பட்டது. 

எனவே அனந்தி சசிதரன் சபையின் சிறப்புரிமையை மீறும் வகையில் பேசி யுள்ளார். இதற்காக இச் சபை கடுமையான கண்டணத்தை தெரிவித்துள்ளதாக அவைத்தலைவர் தெரிவித்துள்ளாா்.