Breaking News

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் உடைப்பு - புதுக்குடியிருப்பு.!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு எதிரான வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக் கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. 

இவ்விடயமாக தமிழ்த்தேசிய மக்கள் முன் னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப் பாளர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. 

கடந்த 14 ஆம் திகதி செஞ்சோலையில் உயிரிழந்த மாணவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவு கூரப்பட் டுள்ளது. 

இன்னிலையில் 16.08.18 அன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலு வலகத்தில் யாரும் இல்லாத வேளை அங்கு சென்ற 8 படையினர் கதவினை உடைத்து உட்புகுந்துள்ளதுடன் சேதப்படுத்தியுள்ளதாகவும் இதனை அருகில் இருந்த அயலவர்கள் நேரில் கண்டு வீட்டின் உரிமையாளருக்கு தெரியப்படுத் தியுள்ளதாக அதன் மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.