சித்திரைக்கு முன் பிரதமரை எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்துவோம் - டிலான் பெரேரா.!
செப்டெம்பர் 5 ஆம் திகதி மக்கள் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதை தெரிவிப்பாா்கள்.
அதன் மூலம் எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்தில் அவருக்கு பொருத்தமான எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்த்துவ தாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி நேற்று கொழும்பில் நடத்திய சந்திப் பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்ததுடன் பிரதமரை பதவி நீக்க வேண்டும் என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 41பேரும் இணைந்து எடுத்த தீர்மானமாகும்.
அதனால் இவ் எதிர்ப்பு போராட்டத்தில் 16 பேர் அணி கலந்து கொண்டால் அவர் களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்படுமெனத் தெரிவித்துள்ளாா்.