Breaking News

வவுனியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி.!

வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 63 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

குறித்த முதியவர் தனது வீட்டில் வேல‍ை செய்து கொண்டிருந்தபோது நீர் இறைக்கும் இயந்திரத்திற் குச் சென்ற மின்சார இணைப்பின் வயரை பிடித்துள் ளார்.

இதன்போது வயறில் மின் ஒழுக்கு ஏற்பட்டு மின் சாரம் உடலில் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டார். உட னடியாக முதியவரை வவுனியா வைத்தியசாலை யில் அனுதித்தபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந் துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனா்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத் துள்ளனா்.