Breaking News

மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் சிக்கினார்.!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோ கம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

மண்டூர் பிரதேசத்திலுள்ள பாட சாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்று வரும் மாணவியை அப்பாடசாலை யில் கடமையாற்றி வரும் பெரிய நீலாவளையைச் சேர்ந்த ஒரு பிள் ளையின் தந்தையான 32 வயதுடைய ஆசிரியர் நீண்ட நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் மேற் கொண்டுள்ளார்.

என பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவதினமான நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய் தனர். இதேவேளை, தாயார் வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்றதனால் பாதிக்கப்பட்ட மாணவி அவரது அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் குறித்த ஆசிரியர் சிறுமிக்கு கையடக்கத் தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அதனூடாக சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி பாட சாலையில் சனி ஞாயிறு கிழமைகளில் நடக்கும் பிரத்தியோக கல்வி நட வடிக்கையின் போது பாடசாலையில் வைத்தும் ஏனைய இடங்களுக்கு வர வழைத்தும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைளகளில் இருந்து தெரிய வந்துள் ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனா்.