Breaking News

முடிவுக்கு வந்தது சர்கார் விவகாரம் ; அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவிப்பு.!

சர்ச்சைக்குரிய காட்சிகளை சர்கார் திரைப்படத்திலிருந்து நீக்கி விட்ட காரணத் தினால், அந்த திரைப்படம் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.

அரசினது சமூக நலத்திட்டங்கள் குறித் தும், முன்னாள் முதல்வரும் - அதிமுக வின் நிரந்தர பொதுச்செயலாளரென அக் கட்சியினரால் கொண்டாடப்படுபவரு மான ஜெயலலிதா குறித்து அவதூறு பரப் பும் காட்சிகளும் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தில் நடைபெற்ற கார ணத்தினால் அதிருப்தியடைந்த அதிமுக தரப்பு, குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கா விட்டால் பகீரத விளைவு களை நீங்கள் சந்திக்க நேரிடுமென படக்குழுவினை எச்சரித்திருந்தது.

அதிமுக தலைமையின் எச்சரிக்கையினை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சர்கார் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகள் அக்கட்சி தொண்டர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளன.

நிலைமை விபரீத நிலையினை எட்டிய காரணத்தினால் குறிப்பிட்ட காட்சி களை நீக்க சர்கார் தயாரிப்பு குழுவு சம்மதம் தெரிவித்திருந்ததனை தொடர் ந்து, இன்று சர்கார் திரைப்படம் மறுதணிக்கை செய்யப்பட்டு குறிப்பிட்ட காட்சி கள் நீக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், முதல்வர் பழனிசாமியுடனான சந்திப்பினுக்கு பின்னர் செவ் வியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதால் இப் பிரச்சனை இத்துடன் முடிவுக்கு வருவதாகத் தெரிவித்துள் ளார்.