Breaking News

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு - நாமல் ராஜபக்ச.!

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளாா்.

இந்தியா டுடேயின் கீதா மோகனிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் 14ம் திகதி நம்பிக் கையில்லா பிரேரணையை விவாதத் திற்கு எடுத்துக் கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துள்ளாா். பாராளுமன் றம் மீண்டும் கூடும்போது நம்பிக் கையில்லா தீர்மானத்தை எதிர் கொள்ளவேண்டிய நிலையேற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு அவசிய மான பலம் எங்களிடம் உள்ளது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். போதியளவு ஆதரவு உள்ளது என தெரிந்த பின்னரே நாங்கள் இத் தீர்மானத்தை எடுத்தோம் என குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச 14 ம் திகதி நம்பிக்கையில்லா பிரேரiணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளமாட்டோம் எனினும் தேவைப்பட்டால் எங்கள் பலத்தை நிரூபிக்க நாங்கள் தயார் எனவும் தெரிவித் துள்ளார்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்கப்போவதில்லை என ஜனாதிபதி சிறிசேன தெளிவாக தெரிவித்துள்ளார் எனவும் நாமல் ராஜபக்ச யார் பிரதமர் என்பதை தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை அரசமைப்பு சிறிசேனவிற்கு வழங் கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருதரப்பும் இணைந்து எவ்வாறு அரசாங்கத்தை அமைக்க முடிந்தது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள நாமல் ராஜபக்ச தங்கள் கட்சி தேசத்தின் நல னிற்கே முன்னுரிமை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க மேற்குலகத்தின் பக்கம் சாய்ந்துகொண்டு இலங்கை யின் நலனிற்கு பாதிப்பை ஏற்படுத்தினார் எனவும் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளாா்.

ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் நலனை விட மேற்குலகின் நலன் குறித்தே அதிகம் கவனம் செலுத்தினார் எனவும் நாமல்ராஜபக்ச தெரிவித்துள் ளார். ரணில் விக்கிரமசிங்க இன்னமும் மேற்குலகிலேயே தங்கியிருக்கின்றார் இலங்கை மக்களில் அவர் தங்கியிருக்கவில்லை எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தான் பதவி நீக்கப்பட்ட விதம் அரசமைப்பிற்கு முரணானது என்றால் ஏன் அவர் நீதிமன்றம் செல்லவில்லையென கேள்வி எழுப்பியுள்ள நாமல் ராஜபக்ச ஏன் அவர் மக்களிடம் செல்லவில்லை எனவும் கேள்வி எழுப் பியுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராகவுள் ளோம் ஆனால் துரதிஸ்டவசமாக அவர்கள் தங்கள் சொந்த சமூகத்துட னேயே சேர்ந்து செயற்படவில்லையென நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகள் தங்கள் நலனை மையமாக வைத்தே செயற்படுகின்றன அவர் கள் மக்களின் நலன் குறித்த அக்கறையுடன் செயற்படவில்லையெனவும் நாமல் ராஜபக்ச  குற்றம் சுமத்தியுள்ளாா்.

பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் தங்கள் மக்களை பிரதிநிதித்துவம் செய் வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லையெனவும் தெரிவித்துள்ளாா்.

மகிந்த ராஜபக்ச சீனாவிற்கு நெருக்கமானவர் என இந்தியா கருதுவது குறித் தும் நாமல் ராஜபக்ச இந்தியா டுடேயிற்கு கருத்து தெரிவித்துள்ளார். நாங்கள் சிறந்த எதிர்காலத்தையே எதிர்பார்க்கின்றோம்.

நாங்கள் வலுவான இந்திய இலங்கை உறவுகளை விரும்புகின்றோம் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச நாங்கள் அயலவர்கள் இன்றைய உலகில் பொருளாதார உறவுகளே முக்கியமானது சீனாவுடான எங்கள் உறவுகள் முற்றுமுழுதாக முதலீடுகளை அடிப்படையாக கொண்டவை எனவும் தெரி வித்துள்ளார்.