Breaking News

த.தே.கூ.வின் நிலைப்பாடு தொடா்பாக சபையில் சுமந்திரன் வெளிப்படுத்தியது என்ன ?

அரசியல் அமைப்பினை பாதுகாத்தால் மட்டுமே தமிழ் மக்களின் அரசியல் தீர் வுகளை காணமுடியும்.

தான் தோன்றித்தனமாக அரசியல் அமைப்பினை கையாளக்கூடாது என் பதற்காகவே நாமும் இணைந்து ஜன நாயக போராட்டத்தை முன்னெடுப்ப தாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ. சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.

ஐக்கிய தேசிய முன்னணியின் செயற்பாட்டிக்கு எங்களின் ஆதரவை கொடுப் போம் எனக் கூறியது ஐக்கிய தேசிய முன்னணியில் நாங்கள் இணைகின் றோம் என்ற அர்த்தமில்லையெனத் தெரிவித்துள்ளாா்.

பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் முன்னணியில் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தல் ஒன்றினை முன் வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.