Breaking News

ஜனாதிபதி உருவாக்கிய அரசியல் ஜனநாயக மீறல் செயற்பாடு என்கிறாா் - ரஞ்சித் மத்தும

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் இருப்பினை தக்கவைத் துக் கொள்வதற்காக நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணாது மிக மோசமான ஜனநாயக மீறல் செயற்பாடுகளை மாத்திரம் முன் னெடுத்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளாா்.

பாராளுமன்றத்தின் கோட்பாடுகளு க்கு ஜனாதிபதி மதிப்பளிக்க வேண் டும் தனக்கு விரும்பியவரை பிரத மராக நியமிக்க வேண்டும், பிடிக்கா தவரை பதவி நீக்கம் செய்ய வேண் டும் என்று 19 ஆவது அரசியலமைப் பில் மாத்திரமல்ல 1978ம் அரசியல மைப்பின் எத்திருத்திருத்தத்திலும் குறிப்பிடவில்லையெனத் தெரிவித்துள்ளாா்.

 மேலும் குறிப்பிடுகையில்.

தன்னால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதை விடுத்து பிறரை குற்றஞ்சாட்டுவதால் எவ்வித மாற்றமும் ஏற்படாது. ஜனாதிபதி தொடர்ந்து மாறுப்பட்ட தர்க்கங்களை குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் நெருக்கடியை தீவி ரப்படுத்தி ஜனநாயக மீறல் செயற்பாடுகளை முன்னெடுப்பது அவரது அடுத் தக்கட்ட அரசியல் இருப்பிற்கும், நாட்டு மக்களுக்கும் பாரிய எதிர்விளைவு களை ஏற்படுத்துமெனத் தெரிவித்துள்ளாா்.