Breaking News

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் அடையக் கூடாதென்கிறாா் - மகிந்த.!

மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் சாதிக்க முடியாமல் போனதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவின் மூலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சாதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

வடமத்திய மாகாணத்தில் நொச்சி யாகம பகுதியில் நேற்றை தினம் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய தற்போதைய எதிர்க் கட்சித் தலைவரான ராஜபக்ச, அர சாங்கத்துக்கு அளிக்கின்ற ஆதரவு மூலமாக தமிழ்த் தேசிய கூட்டமை ப்பு அரசியல் ஆதாயம் அடையக் கூடும்.

போரின் முரமாக அடைய முடியா ததை அரசியலமைப்பின் ஊடாக அவர்கள் அடைந்துவிட ஒருபோதும் அனு மதிக்கவே கூடாதெனத் தெரிவித்துள்ளாா்.

புதிய அரசியலமைப்பொன்றை பிரதமர் விக்கிரமசிங்க அறிமுகப்படுத்தும் போது சூழ்ச்சித்தனமான வழிவகைகளின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப் பினர் அரசியல் சுயாட்சியைப் பெற்றுக்கொள்வதற்கு தாங்கள் அரசாங்கத் துக்கு அளிக்கின்ற ஆதரவை பயன்படுத்துவார்கள் என்று எச்சரிக்கை செய்த ராஜபக்ச இந்த நாடு பிரிக்கப்படவோ அல்லது துண்டாடப்படவோ முடியா தெனத் தெரிவித்துள்ளாா்.