Breaking News

மகாநாயக்க தேரர்களையும் அரசாங்கம் எச்சரிப்பதாக - விமல் வீரவன்ச

சமஷ்டிக்கான வழியை அமைத்துக் கொள்ளும் நடவடிக்கையாகவே அரசி யலமைப்புத் தொடர்பான ஆலோ சனை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதனை எதிர்க்காவிட்டால் அதுவே சட்டமூலமாக எதிர்காலத்தில் வரும். அத்துடன் இதனை எதிர்க்கும் மகாநாயக்க தேரர்களையும் அரசாங்கம் ஆள் விட்டு எச்சரிக்க ஆரம்பித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலை வரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளாா். 

தேசிய சுதந்திர முன்னணி, பத்தர முல்லையில் அமைந்துள்ள கட்சி காரியா லயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக் கையிலேயே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

உத்தேச அரசியலமைப்பு தொடர்பான வரைபைக்கூட இதுவரை தயாரிக்க வில்லை என பிரதமர் கொழும்பில் தெரிவித்தாலும்   ஆனால் அரசியலமைப்பு சட்டமூலமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட் டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள் ளாா்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அளித்திருக்கும் வாக்குறுதிக்கமைய வடக் குக்கு சமஷ்டியை பெற்றுக்கொடுப்பதற்கான வழியை அமைத்துக் கொள்ளும் நோக்கிலே அரசியலமைப்பு தொடர்பான ஆலோசனை அறிக்கை என தெரி வித்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.