Breaking News

கைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றில் விசாரணைக்காக அழைப்பு.!

சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதாகக் கூறப்படு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ் தரான பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளர் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். 

குருணாகல் - அலகொலதெனிய பகு தியில் தென்னந்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதப் பயிற்சி முகாம் தொடர்பில் 21/4 தொடர் தற்கொலை தக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷி முடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதாகக் கூறப்படும்  கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெள ஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தரான பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளர் மேலதிக விசாரணைகளுக்காக நேற்றைய தினம் பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

கண்டி - அலவத்துகொட மாவத்துபொல இலக்கம் 60 எனும் முகவரியைக் கொண்ட 42 வயதான மொஹம்மட் நெளசாட் ஜமால்தீன் எனும் அந்த நபர் மூன்று மாத தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையி லேயே சிறப்பு பொலிஸ் குழுவினரால் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார்.

சந்தேக நபரான பாராளுமன்ற அலுவலக ஊழியரால் பயன்படுத்தப்பட்ட உப கரணங்கள் இதன்போது சோதனையிடப்பட்டதுடன் அவரால் மேற்கொள்ளப் பட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றதாக விசார ணைகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில் பாராளுமன்றில் அவசியமான சில ஸ்தல விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரை மீள விசாரணை தரிப்பிடத்துக்கு அழைத்து செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.