Breaking News

பதவியை இராஜினாமா செய்ய ஆயத்தம் - அமைச்சர் ரிஷாத்

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு நான் தயா­ராக உள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன், நானும் எனது கட்­சியை சேர்ந்த இரண்டு பிரதி அமைச்­சர்­களும் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு பாரா­ளு­மன்­றத் தில் பின்­ வ­ரிசை ஆச­னத்தில் அமர்­வ­தற்கு தயா­ராக உள்ளதாகத் தெரிவித் துள்ளாா். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று அமைச்­ச­ரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையி லேயே  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.

 இதன்போது தன்­ மீ­தான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் விளக்­க­ம­ளித்­துள்ளார். தனக்கு எதி­ராக எதி­ர­ணி­யினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள பத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் அவர் விளக்கமளித்துள்ளாா்.

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடைபெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட நபரை விடுக்­கு­மாறு இரா­ணு­வத்­த­ள­ப­தி­யிடம் தான் கோரி­ய­தாக தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்டு மற்றும் குண்­டுத்­தா­ரி­க­ளான சகோ­த­ரர்­களின் தந்­தை­யான இப்­ராஹிம் உட­னான தொடர்பு குறித்த குற்­றச்­சாட்டு என்­பன குறித்தும் அமைச்சர் விளக்­க­ம­ளித்­துள்ளார்.

தன் ­மீ­தான குற்­றச்­சாட்­டுக்கள் அபாண்­ட­மா­னவை என்றும் இக் கூட்டத்தில் பிர தமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.