Breaking News

வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

காலாவதியான சாரதி அனுமதிபத்திரங்களையும் பயன்படுத்தியும் ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சாரதி அனுமதி பத்திரங்கள் காலாவதியாகியிருப்பினும் தற்போதைய கொவிட் 19 நிலைமையை கருத்திற்கொண்டு அவற்றை பெற்றுக்கொள்ள மோட்டார் வாகன திணைக்களம் சலுகை காலத்தை வழங்கியுள்ளது.

அதன்படி சலுகை காலம் மார்ச் முதல் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காலாவதியான சாரதி அனுமதிபத்திரங்களை பெற்றுக்கொள்ள ஆறு மாதங்களும், ஜூன் முதல் செப்டம்பர் வரை காலாவதியான சாரதி அனுமதிபத்திரங்களை பெற 3 மாதங்களும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த சலுகை காலத்தை தாண்டாத சாரதி அனுமதிபத்திரங்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான அடையாள அட்டையாக கருதப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க பிரத்தியேக பேனைகளை பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவை நீலம் அல்லது கருப்பு பேனையாக இருக்க வேண்டும் எனவும், அதில் எந்தவொரு கட்சி வேட்பாளரையும் ஊக்குவிக்கும் எந்த அடையாளமும், நிறமும், சின்னமும் இருக்கக்கூடாது எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் ஒருவர் தனக்கான சொந்த பேனாவை கொண்டு வர முடியாவிட்டால், அத்தகைய வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்காக கிருமிதொற்று நீக்கம் செய்யப்பட்ட பேனைகள் வழங்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.