Breaking News

யாழில் நீரில் மூழ்கி சகோதரர்கள் இருவர் பலி?

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள்இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சோகச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவைச் சேர்ந்த 7 வயதுடைய சாவிதன் மற்றும் 5 வயதுடைய சார்வின் ஆகிய இருவருமே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. 

சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன. அதே வேளை சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.