Breaking News

கோலியின் பங்களிப்பின் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு பலன் கிடைக்கும் – ராகுல் ட்ராவிட்

 


ஒரு அணியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்தும் முன்னேற்றம் காண விரும்புவதாக இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

மேலும் இதை வீரராகவும் அணியின் தலைவராகவும் அற்புதமாக செயற்படும் விராட் கோலியின் பங்களிப்பு மிக முக்கியமானது என அவர் கூறினார்.

டெஸ்ட் தொடரை விரும்பும் வீரர்களில் ஒருவரான விராட் கோலிக்கு இந்த தொடர் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

அவரது பங்களிப்பின் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு பலன் கிடைக்கும் என்றும் ராகுல் ட்ராவிட் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி தலைவர் தெரிவு விவகாரம் தேர்வாளர்களின் முடிவு என்றும் அந்த விடயத்தை தற்போது அறிவிக்கப்போவதில்லை என்றும் ராகுல் ட்ராவிட் கூறினார்.