Breaking News

இன்றைய வானிலை நிலைமை!

 


சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை நிலைமை : புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை
மட்டக்களப்பு - பிரதானமாக சீரான வானிலை
கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை
காலி - பிரதானமாக சீரான வானிலை
யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை
கண்டி - பிரதானமாக சீரான வானிலை
நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை
இரத்தினபுரி - பிரதானமாக சீரான வானிலை
திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை
மன்னார் - பிரதானமாக சீரான வானிலை