Breaking News

சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற நடிகை சமந்தா?

 


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் 'யசோதா' என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளார். 

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சமந்தா இதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியிலும் சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் வருகின்றன. இந்நிலையில், நடிகை சமந்தா வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த சில வருடங்களுக்கு முன் சமந்தாவிற்கு தோல் பிரச்சினை ஏற்பட்டது. 

சமந்தா இதனால் 'அஞ்சான்' படப்பிடிப்பின்போதும் அவர் வெளிநாடு சென்று சிகிச்சைப் பெற்று வந்தார். தற்போது அந்தபிரச்னை மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சமந்தா வெளிநாடு சென்று சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதனை சமந்தா தரப்பிலிருந்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை.