Breaking News

சிறுபான்மைக் கட்சிகளுடன் சேர்ந்து நாட்டை பிரிக்க மைத்திரி சதி- பொதுபல சேனா

தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து நாட்டை பிரிக்க மைத்திரி சதி செய்வதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.


மு.கா. அரசிலிருந்து வெளியேறிய நிலையில் பொதுபல சேனாவின் கூட்டம் நேற்று எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்றது.இதில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், வழக்கம் போன்று இனவாத விசம் தொனிக்கும் கடுமையான வார்த்தைகளில் உரையாற்றினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஞானசார தேரர்,

பௌத்தர்களை இழிவுபடுத்திய தௌஹீத் ஜமாஅத் பொது வேட்பாளருடன் சேர்ந்து போட்டோ எடுத்திருக்கிறார்கள். NFGG, PMGGபோன்ற புதிய அமைப்புகள் மைத்திரியுடன் கை கோர்த்துள்ளது. இவ்வமைப்புகள் எல்லாம் வஹாப் வாதிகள், அடிப்படைவதிகள்.

தேசிய ஷுரா சபையின் முன்னால் தலைவர் சட்டத்தரணி சுஹைர் அவர்களும் சமஸ்த லங்கா பெரமுன என்று ஆரம்பித்து மைத்திரியுடன் சென்றுள்ளார்.இவர்கள் எல்லோரும் வஹாப் வாதிகளுக்கு கீழ் இயங்கும் அடிப்படைவாதிகள். இவர்கள் எல்லோரும் பொது வேட்பாளரின் வெற்றிக்கு மும்முரமாக ஈடுபடுகிறார்கள்.

பொதுபல சேனா இது போன்ற கருத்துக்களை பௌத்தர்களிடம் தூண்டி விட்டு மைத்திரியின் ஆதரவை குறைக்க முற்படுகின்றது.முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்திருக்கும் வரையில் அடக்கி வாசிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட பொதுபல சேனா தற்போது மஹிந்தவை காப்பாற்றுதற்காக நேரடியாக களம் இறங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.