Breaking News

மகிந்த, பசில், கோட்டா, நாமல் கட்சியில் இருந்து விரட்டியடிப்பு! நிர்க்கதியான ராஜபக்சக்கள்

மோசடியில் ஈடுபட்ட மகிந்த மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு எதிர்வரும்நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தோல்வியடைந்த மகிந்த, அவரது மகன் நாமல், கோட்டா மற்றும் பசில் ஆகியோருக்கே இவ்வாறுஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சபாநாயகர் சமல் ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதனால், அவருக்குபதிலாக அவரது மகன் சஷீந்திர ராஜபக்சவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட அனுமதிகிடைத்துள்ளதாகவும் அவர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில்களமிறங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் மகிந்தவை மீண்டும் தலைதூக்க விடக்கூடாது என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியையும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவையும்சந்தித்து கலந்துரையாடியு ள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.