Breaking News

ஜுலை இறுதியில் நாடாளுமன்றத் தேர்தல்?

20ஆவது திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தல் ஜுலை மாத இறுதியில் நடத்தப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய தேர்தல் முறைமை உள்ளடக்கப்பட்ட 20ஆம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போதைய முறையில் நடத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

புதிய முறைமையின் கீழ் தேர்தல் தேர்தல் பிரிவுகள் மறுபங்கீடு செய்யப்படுவது மற்றும் அது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு குறைந்த பட்சம் 06 மாத காலங்கள் தேவைப்படும் என்பதனால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட எதிர்கட்சிகள் பல எதிர்வரும் பொதுத் தேர்தலை புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் எனவும், 19ஆம் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவு வழங்கியதற்கான பிரதான ஒப்பந்தங்களில் ஒன்று இதுவெனவும் தெரிவிக்கப்படுகின்றது. புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கு பல மாதங்கள் தேவைப்படுவதனால் தற்போதைய முறையில் நடத்துவதற்கே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன

.