Breaking News

புலம்பெயர் தமிழர்களுக்கான மாநாட்டின் பின்னணியில் புலிகளின் தூண்டுதலே உள்ளது

புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்­கான மாநாட்டை நடத்­து­வதன் பின்­ன­ணியில் புலி­களின் தூண்­டு­தலே உள்­ளது. இந்த உண்­மை­களை விரைவில் கண்­ட­றிவோம் என எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பா­லடி சில்வா தெரி­வித்தார். மாநாட்டை தடுப்­பது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வு ள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்­கான மாநாட்டை நடத்­தியே தீருவோம் என அர­சாங்கம் தெரி­வித்­துள்ள நிலையில் எதிர்க்­கட்­சியின் நிலைப்­பாட்­டினை வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் இருந்து வெளி­யே­றிய தமிழ் மக்கள் அனை­வரும் புலிகள் அல்ல. இந்த நாட்டை விட்டு வெளி­யே­றிய இல ங்கை மக்­கள் அனை­வரும் மீண்டும் இலங்­கையில் மீண்டும் குடி­யேற வேண்டும் என்­பதை எமது ஆட்­சியில் இருந்தே தெரி­வித்து வந்­துள்ளோம். அதற்­கான பல பேச்­சு­வார்த்­தைகள் மற்றும் முயற்­சிகள் எமது ஆட்­சியில் எடுக்­கப்­பட்­டுள்­ளன. இதில் தமிழ் மக்கள் மட்டும் அல்­லது இலங்­கையில் இருந்து 1983ஆம் ஆண்­டு­களில் வெளி­யே­றிய சிங் கள் மக்கள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் இன்றும் வெளி­நா­டு­களில் வாழ்­கின்­றனர். அவர்­க­ளையும் மீண்டும் நாட்­டுக்குள் வர­வ­ழைக்­க வேண்டும். 

ஆனால் இந்த விட­யத்தில் பாது­காப்பு அச்­சு­றுத்தல் நிலை­மையே அதி­க­மாக உள்­ளது. விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் ஆத­ர­வா­ளர்கள் பலர் இன்று வெளி­நா­டு­களில் வாழ்ந்து வரு­கின்­றனர். புலி­க­ளுக்­கான பண உத­விகள் மற்றும் ஆயுத உத­வி­களை வழங்­கிய பலர் இன்னும் சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­களை வைத்­துள்­ளனர். அவர்­களை மீண்டும் இலங்­கைக்குள் அனு­ம­திக்கக் கூடாது என்­பதில் நாம் தெளி­வாக உள்ளோம்.

எமது ஆட்­சியின் போதும் புலி­களின் சர்­வ­தேச அமைப்­புகள் எம்­முடன் தொடர்­பு­களை வைத்­துக்­கொள்ள முயற்­சித்­தனர். ஆனால் எமது அர­சாங்கம் அவை எதற்கும் இணக்கம் தெரி­விக்­காது பாது­காப்பை பலப்­ப­டுத்­து­வதில் அதிக அக்­கறை செலுத்­தி­யது. ஆனால் இந்த அர­சாங்கம் புலி­களின் நிகழ்ச்சி நிரலை நடை­மு­றைப்­ப­டுத்தும் வகையில் செயற்­ப­டு­கின்­றனர். சர்­வ­தேச புலிகள் அமைப்­பு­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­கின்­றனர். 

லண்டன் பேச்­சு­வா­ர் த்தையில் அர­சாங்கம் என்ன பேசி­யது, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு என்ன பேச்­சு­வார்த்தை நடத்­தினர் என்ற உண்மை இன்னும் வெளி­வ­ர­வில்லை. நாட்­டுக்கு சாத­க­மான பேச்­சு­வா­ர்த்தை­யாக இருந்­தி­ருந்தால் அங்கு பேசி­யதை இவர்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும். ஆனால் இன்­று­வரை உண்மை வெளி­வ­ர­வில்லை. ஆகவே இந்த பேச்­சு­வார்­தையின் பின்­ன­ணியில் புலி­க­ளு­ட­னான ஒப்­பந்­தங்கள் உள்­ளன என்று நாம் சந்­தே­கப்­ப­டு­வதில் தவ­றேதும் இல்லை.

மேலும் புலம்­பெயர் அமைப்­பு­களை ஒன்­றி­ணைத்து இலங்­கையில் மாநாடு நடத்த அர­சாங்கம் திட்டம் தீட்­டு­கின்­றது. இது நாட்­டுக்கு மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­த­லாகும். புலம்­பெயர் தமி­ழர்­களின் பட்­டி­யலில் புலிகள் அமைப்­பு­களே அதி­க­மாக உள்­ளன. சாதா­ரண மக்கள் அனை­வரும் இன்றும் இலங்­கையில் தான் உள்­ளனர். யுத்த கால­கட்­டத்தில் நாட்டை விட்டு வெளி­யே­றிய தமி­ழர்­களின் பின்­புலம் சரி­யாக தெரி­யாது அவர்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைத்து வரு­வது நல்­ல­தல்ல.

 ஆகவே அர­சாங்கம் உட­ன­டி­யாக இந்த முயற்­சியை கைவிட வேண்டும். வெளி­நா­டு­களில் மாநா­டுகள் நடப்­பதை காரணம் காட்டி இலங்­கையில் புலி­க­ளுக்­கான மாநா­டு­களை நடத்­து­வது மீண்டும் நாட்டை பிரி­வி­னையின் பாதையில் கொண்டு செல்­வ­தாக அமைந்­து­விடும். அதேபோல் எதிர்க்­கட்சி என்ற ரீதியில் எமக்கு மிகப்­பெ­ரிய பொறுப்பு உள்­ளன. நம் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்றோம். இந்த மாநாட்டின் பின்­ன­ணியில் புலி­களின் பல­மான தூண்­டுதல் உள்­ளது. 

எனவே இதன் பின்னணியில் யார் இயங்குகின்றனர் என்ற உண்மையை விரைவில் வெளியிடுவோம். அதேபோல் இந்த புலம்பெயர் தமிழர்களின் மாநாடு இலங்கையில் நடத்தாது தடுப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவா ர்த்தை நடத்தவுள்ளோம். அவரது அனுமதி இந்த விடயத்தில் இல்லையென நாம் நம்புகின்றோம். எனவே விரைவில் பல உண்மைகள் வெளிவரும் எனக் குறிப்பிட் டார்.