Breaking News

இன்று கூச்­ச­லி­டுவோர் அன்று எலி­களை விழுங்­கிய பூனை­களைப் போல் இருந்­தனர் - சபையில் மங்கள

கே.பி. தலை­மையில் 22 புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்கள் கோத்தபாயவுடன் பேச்சு நடத்­திய போது எலிகளை விழுங்­கிய பூனைகளைப் போல் வாலை சுருட்டிக் கொண்­டி­ருந்­த­வர்கள் இன்று வீரர்­க­ளாகி வாய் திறக்­கின்­றனர் என நேற்று சபையில் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் எம்.பி. தேசிய பாது­காப்பு தொடர்­பாக முன்­வைத்த சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை மீதான விவா­தத்தில் பதி­ல­ளித்து உரை­யாற்றும் போதே அமைச்சர் மங்­கள சம­ர­வீர இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­க­ளோடு நான் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யதை பெரி­து­ப­டு த்தி அதற்­கெ­தி­ரான கருத்­துக்­களை அபே­ராம குழு வெளி­யிட்டு வருகிறது. விமல் வீர­வன்ச இதில் முன்­ன­ணியில் உள்ளார். ஒரு சிலர் நீதி­மன்றம் செல்லப் போவ­தாக கூறு­கி­றார்கள்.

ஆனால் இன்று புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­க­ளோடு பேசு­வ­தற்கு எதி­ராக கூச்­ச­லி­டு­கின்­றனர். அன்­றைய ஆட்­சி­யிலும் அமைச்­சர்­க­ளாக இருந்­த­வர்கள். அப்­போது கே.பி. தலை­மையில் 22 புலம் பெயர் தமிழ் அமைப்­புக்­களை சேர்ந்தோர் கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்­டனர். அன் றைய பாது­காப்பு செய­லாளர் கோ­த்தபாய ராஜ­பக் ஷ இவ் அமைப்­புக்­க ளோடு பேச்சு நடத்­தி­யுள்ளார்.

அது மட்­டு­மல்ல புலி­க­ளுக்கு சர்­வ­தேச ரீதியில் நிதி சேக­ரித்த தர்­ம­லிங்கம் யோகேஸ்­வரன் என்­ப­வரை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ சந்­தித்து பேச்சு நடத்­தினார். இன்று கூச்­ச­லி­டுவோர் அன்று எலி­களை விழுங்­கிய பூனை­களைப் போல் வாலை சுருட்டிக் கொண்டு மெள­ன­மாக இருந்­தனர்.

வாலை சுருட்டிக் கொண்­டி­ருந்­த­வர்கள் இன்று வீரர்­க­ளாகி விட்­டனர். புலம்­பெயர் அமைப்­புக்­க­ளுடன் அர­சியல் தீர்வு தொடர்­பா­கவோ யுத்தக் குற்ற விசா­ர­ணைகள் தொடர்­பா­கவோ பேச­வில்லை. மாறாக இலங்­கையின் அபி­வி­ருத்தி புலம்­பெ­யர்ந்­த­வர்­களின் நிபு­ணத்­து­வத்­தையும் பங்கு பற்றுதலையும் பெற்றுக் கொள்­வது தொடர்­பா­கவே பேசினோம்.

யுத்தக் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பாக உள் ளக விசாரணைகளே நடத்தப்படும். இந்த தீர்மான த்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அதேவேளை உள்ளக விசாரணைக்கு சர்வ தேசத்தின் உதவிகள் மட்டுமே பெற்றுக் கொள் ளப்படும் என்றார்.