Breaking News

தேசியக்கொடியை ஏற்றும் காலம் வரும் - ஆனந்தசங்கரி நம்பிக்கை

இலங்கை தேசியக் கொடியை இது­வ­ரையில் நான் எந்­த­வொரு நிகழ்­வி-லும் ஏற்­ற­ வில்லை. அதற்­கு­ரிய காலம் விரைவில் ஏற்­படும். இதற்­காக தேசியக் கொடியை அவ­மா­னப்­ப­டுத்தும் நப­ராக என்னைக் கரு­த­வேண்டாம் என தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைவர் வீ. ஆனந்­த­சங்­கரி தெரி­வித்தார்.

பளை விளை­யாட்டு மைதா­னத்தை உத்­தி­யோ­க­பூர்­வ­மாகத் திறந்துவைத்து உரை­யாற்­றுகை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

தேசியக்கொடி ஏற்­றும்­படி இன்­றைய நிகழ்வில் அறி­வு­றுத்­தப்­பட்­டது. தேசியக் கொடியை இது­வரை நான் எந்­த­வொரு நிகழ்­விலும் ஏற்­ற­வில்லை. அதற்­காக தேசியக் கொடியை அவ­மா­னப்­ப­டுத்­து­ப­வ­னாக கருதக்கூடாது. தேசியக் கொடியை ஏற்­றக்­கூ­டிய காலம் விரைவில் வரும் என்றார்.

நாட்டில் சமா­தா­னத்­தினை ஏற்­ப­டுத்தும் வகையில் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அந்த சமா­தா­னத்­தினை குழப்பும் வகையில் பல்­வேறு கருத்­துக்கள் மாணவர் மத்­தி­யிலும், மக்கள் மத்­தி­யிலும் அர­சி­யல்­வா­திகள் பேசு­கின்­றனர் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

முன்­ன­தாக இந்­நி­கழ்வில் தேசியக் கொடியை ஏற்றுமாறு ஆனந்தசங்கரியைக் கோரியபோது அவர் அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.