Breaking News

20 க்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஜனாதிபதியும் எஸ்.பி., ராஜிதவும் என்னைத் திட்டித்தீர்த்தனர்

சிறு­பான்மை மக்­க­ளுக்கு பாத­க­மான தேர்தல் முறைமை அமைச்­ச­ர­வைக்கு வந்­த­போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார­ணத்­தினால் இவ்­வி­ட­யத்தை சீர­ழிக்க முற்­ப­ட­வேண்­டா­மென்று ஜனா­தி­ப­தியும், அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன மற்றும் எஸ்.பி. திஸா­நா­யக்க ஆகியோர் என்னை திட்­டித்­தீர்த்­தனர் என அமைச்சர் திகாம்­பரம் நேற்று சபையில் தெரிவித்தார்.

நடை­மு­றை­யி­லுள்ள தேர்தல் முறையே சிறந்­தது, எனினும் புதிய முறைமை எமது மக்­க­ளுக்கு அநீ­தி­யாக இருக்­கக்­கூ­டாது, அவ்­வாறு அநீதி இழைக்­கப்­பட்டால் முழு­மை­யாக எதிர்ப்போம் என்றும் கூறினார். பாரா­ளு­மன்­றத்தின் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற புதிய தேர்தல் முறைமை தொடர்­பான சபை ஒத்­திவைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு பேசு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்று இது தொடர்பில் முன்­வைக்­கப்­ப­டும்­போது அதற்கு முழு­மை­யான எதிர்ப்பை தெரிவித்­தவன் நான் இவ்­வி­டயம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வந்­தன. இந்த பேச்­சு­வார்த்­தை­களின் போது சில சந்­தர்ப்­பங்­களில் தொகு­தி­வாரி முறையில் 165 ஆச­னங்கள் என்று கூறப்­பட்­டது. மேலும் ஒரு முறை 125 ஆச­னங்கள் என்றும் கூறப்­பட்­டது, அத்­துடன் 225 உறுப்­பி­னர்­களை கொண்­ட­தாக சட்­டத்­தி­ருத்தம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று கூறப்­பட்­டது. இருந்­த­போ­திலும் தொகு­தி­வாரி முறை ஆசன எண்­ணிக்கை ஒரே­ய­டி­யாக 125 ஆக குறைந்­தது.

இவ்­வி­டயம் தொடர்பில் நான் அமைச்­ச­ரவை கூட்­டத்தில் எதிர்ப்பு தெரிவித்­த­போது ஜனா­தி­பதி எனக்கு ஏசினார். அத்­துடன் அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன மற்றும் எஸ்.பி. திஸா­ந­ாயக்க ஆகி­யோரும் என்னை திட்­டித்­தீர்த்­த­துடன் இவ்­வி­ட­யத்தை சீர­ழிக்க முற்­பட வேண்­டா­மென்றும் கூறினர்.

நான் இவ்­வி­ட­யத்தை சீர­ழிப்­ப­தற்கு ஒரு­போதும் முற்­ப­ட­வில்லை இத்­தி­ருத்தம் நிச்­ச­ய­மாக நிறை­வேற்­றப்­பட வேண்டும். எனினும் 20 ஆவது திருத்தம் தொடர்பில் அச்­ச­மொன்றும் உள்­ளது. தொகுதி முறையில் 125 ஆச­னங்­க­ளாக குறைக்கும் பட்­சத்தில் எமது ஆச­னங்­களை அதி­க­ரிப்­பதில் சிக்கல் உள்­ளது. எனினும் 165 ஆச­னங்கள் எனும்­போது எமக்கு சிக்கல் இருக்­காது.

தொகுதி முறை தேர்தலுக்கு செல்லும் பட்­சத்தில் நுவ­ரெ­லியா, மஸ்­கெ­லியா தொகு­தி­களில் மட்­டுமே எமக்கு ஆச­னங்­களை பெறும் சாத்­தி­ய­முள்­ளது. ஆனால் பதுளை கொழும்பு, கண்டி போன்ற மாவட்­டங்­களில் நாம் எமது உறுப்­பி­னர்­களை தெரிவு செய்து கொள்­வது முடி­யாத காரி­ய­மாகும்.

ஏனெனில் இப்­ப­கு­தி­களில் எமது மக்கள் சிங்­கள மக்­க­ளு­ட­னேயே வாழ்ந்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் நுவ­ரெ­லியா, மஸ்­கெ­லியா தேர்தல் தொகு­தியில் மூன்று லட்­சத்­துக்கும் அதி­க­மான வாக்­குகள் இருப்­பதால் அத்தேர்தல் தொகு­தியை நான்கு தொகு­தி­க­ளாக உரு­வாக்கும் படியே கோரினோம். அது­போன்று அங்­கு­ரங்கெத்த மற்றும் வலப்­பனை தொகு­தியை பல்­லின ஆசனத்தொகு­தி­க­ளாக பிரேரிக்­கு­மாறும் கேட்டுக் கொண்டோம். அத்­துடன் பதுளை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்­டங்­க­ளிலும் பல்­லின ஆச­னத்­தொ­கு­தியை ஏற்­ப­டுத்­து­மாறு கூறி­யி­ருந்தோம்.

உண்­மை­யான விட­யங்­களை கூறு­வதோ வெளிப்­ப­டுத்­து­வதோ கிடை­யாது மாறக எல்லாம் தர முடியும் என கூறு­கின்­றனர் அவ்­வாறு கூறு­வதை நாம் எவ்­வாறு நம்­ப­மு­டியும். எமது மக்­களின் தொகைக்­கேற்ப பாரா­ளு­மன்­றத்தில் 11 உறுப்­பி­னர்­கள் இருப்­பது அவ­சியம். அவ்­வா­றான வகையில் இந்த தேர்தல் திருத்தம் வரு­மாக இருந்தால் இணைந்து செயற்­பட முடியும் இல்­லா­த­வி­டத்து எமது கோரிக்­கை­க­ளுக்கு செவி­சாய்க்­கப்­ப­டா­விட்டால் இத்­திட்­டத்­திற்கு நாம் எதி­ரா­கவே செயற்­ப­டுவோம்.

அடுத்து அமை­யப்­போ­வது ஐக்­கிய தேசிய கட்சி ஆட்­சி­யாக இருக்­கலாம் இல்­லா­விட்டால் சுதந்­தி­ரக்­கட்சி ஆட்­சி­யாக இருக்­கலாம். எப்­ப­டி­யி­ருப்­பினும் இதனை ஆறு­த­லாக அவ­சர­மில்­லாது நிறை­வேற்றிக் கொள்ள முடியும். அவ­சர அவ­ச­ர­மாக கொண்டு வரப்­ப­டு­கி­ன்ற திருத்­தம் எதிர்­கா­லத்தில் விளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்தும்.

சிறு­பான்­மை­யி­னரும் சிறு மற்றும் சிறு­பான்மை கட்­சி­யி­னரும் இன்று அச்­சத்­தி­லேயே இருக்­கின்­றனர் தற்­போது நடை­மு­றை­யி­லி­ருக்­கின்ற தேர்தல் முறைமையே ஜனநாயகம் அதிகரித்துள்ள முறையாகும். விருப்பு வாக்கு முறைமையே சிறந்ததாகும். இதனூடாகவே எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடியதாக இருக்கும். அதனால் இந்த முறைமையே வேண்டுமென்றும் நாம் கூறவில்லை. புதிய தேர்தல் முறையை கொண்டு வருவதென்றால் எமது சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படாத வகையில் அமைய வேண்டும். அநீதி இழைக்கப்பட்டால் நாம் எமது முழுமையன எதிர்ப்பை வெளியிடுவோம்.