திடீர் சுற்றிவளைப்புக்களில் 40 பேர் கைது! கிளிநொச்சி பொலிஸார் தெரிவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களின் போது 40 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக எம்.இளஞ்செழியன் நியமிக்கப்பட்டதன் பின்னர் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு ஒரு மாதகாலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரைப் பணித்திருந்தார். அத்துடன், பாரபட்சமின்றி குற்றவாளிக-ளுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனையடுத்தே, கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த-னர். இதன்போது சட்டவிரோத செயற்பா-டுகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 40 பேரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவ-தாக கிளிநொச்சி மாவட்ட பொலி-ஸார் தெரிவித்தனர்.








