Breaking News

தேசிய அர­சாங்­கத்­துக்கு சுதந்­திரக் கட்சி இணக்கம்

நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெற்றி­யீட்­டி­யுள்ள ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்கு சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழு நேற்று அங்­கீ­காரம் வழங்­கி­யது.

அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைப்­பது தொடர்பில் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை ஒன்றை கைச்­சாத்­தி­டு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடி­வெ­டுக்க சுதந்­திரக் கட்­சியின் சார்பில் விசேட குழு ஒன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழு நேற்று கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் கூடி­ய­போதே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் தேசிய அர­சாங்கம் அமைக்கும் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­வது எவ்­வாறு அமைச்சுப் பத­வி­களை பெறு­வது என்­பது குறித்து ஆராய்­வ­தற்கு விசேட குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. .

அந்தக் குழுவில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பாளர் சுசில் பிரேம்­ஜ­யந்த, பொரு­ளா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள எஸ்.பி. திசா­நா­யக்க, முன்னாள் எதிர்க்­கட்சித் தலைவர் நிமால் சிறி­பால டி. சில்வா, ஜோன் சென­வி­ரட்ன சமல் ராஜ­பக்ஷ குமார வெல்­கம கெஹெ­லிய ரம்­புக்­வெல உள்­ளிட்­டோரும் இடம்­பெற்­றுள்­ளனர். இந்தக் குழுவின் செய­லா­ள­ராக ரஞ்சித் சியம்­பலா பிட்­டிய நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இந்தக் குழு­வா­னது ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்கம் அமைப்­பது தொடர்பில் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­தி­டு­வது குறித்த விட­யங்­களை ஆரா­ய­வுள்­ளது. நேற்­றைய தினமே குறித்த குழு தனது கலந்­து­ரை­யா­டல்­களை ஆரம்­பித்­த­தாக குழுவின் உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

குறைந்த பட்சம் இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்து செயற்­ப­ட­வேண்டும் என சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இதன்­போது பல்­வேறு தலை­வர்­களும் கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர். எனினும் தேசிய அர­சாங்கம் அமைக்­க­வேண்டும் என்ற கருத்­துக்கு பலர் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர்.

மத்­திய குழுக் கூட்­டத்தில் கருத்து வெளி­யிட்ட டலஸ் அழ­கப்­பெ­ரும இது ரணில் விக்­ர­ம­சிங்­கவின் அர­சாங்கம் என்­பதால் அவரின் ஆதிக்கம் அதி­க­ரிக்­குமே என்று வின­வி­யுள்ளார். அதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவ்­வாறு சிந்­திக்­க­வேண்டாம் என்றும் இனி­வரும் காலங்­களில் நாட்டில் மைத்­திரி நிர்­வா­கமே இருக்கும் என்று சிந்­திக்­கு­மாறும் தெரி­வித்­துள்ளார்.

மேலும் அமைச்­சுக்­களை பகிர்ந்து கொள்ளும் செயற்­பாட்­டிலும் விசேட கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. அதா­வது நிதி­ய­மைச்சு வெளி­வி­வ­கார அமைச்சு துறை­மு­கங்கள் ஊட­கத்­துறை உள்­ளிட்ட மிக முக்­கிய அமைச்­சுக்­களை பகிர்ந்­து­கொள்­ளவும் சுதந்­திரக் கட்சி தீர்­மா­னித்­துள்­ளது.

அதா­வது அமைச்­ச­ர­வையை நான்கு துறை­க­ளாக பிரித்து அவற்றின் அடிப்­ப­டையில் சத­வீத பொறி­மு­றைக்க அமைய அமைச்சுப் பத­வி­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என இதன்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இறு­தியில் குறைந்த பட்சம் இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைக்­கலாம் என்ற முடி­வுக்கு சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழு வந்­த­துடன் அதற்­கான அங்­கீ­கா­ரத்­தையும் வழங்­கி­யது.அந்­த­வ­கையில் ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து ஆட்­சி­ய­மைக்கும் பட்­சத்தில் இரண்டு தரப்­பி­ன­ருக்கும் தலா 15 அமைச்சுப் பத­விகள் வீதம் வழங்­கப்­ப­டு­வ­தற்கு ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் தலா 25 பிர­தி­ய­மைச்சுப் பத­வி­களை வழங்­கு­வது குறித்தும் ஆலோ­சிக்க்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அவ்­வாறு பார்க்­கு­மி­டத்து 30 அமைச்சுப் பத­வி­களும் 50 பிர­தி­ய­மைச்சுப் பத­வி­களும் மொத்­த­மாக உரு­வாக்­கப்­படும் என கூறப்­ப­டு­கின்­றது.

இது தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள் கடந்த மூன்று தினங்­க­ளா­கவே இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. எனினும் அமைச்­ச­ரவை அமைச்சுப் பத­விகள் மற்றும் பிர­தி­ய­மைச்சுப் பத­வி­களின் எண்­ணிக்கை தொடர்பில் இது­வரை ஐக்­கிய தேசிய கட்­சி­யினால் இறுதி தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றே தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இதே­வேளை ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். இதன்­போது தன்­னு­டைய அர­சாங்கம் எவ்­வாறு இருக்கும் என்­பது குறித்து பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஜனா­தி­ப­திக்கு விளக்­க­ம­ளித்­துள்ளார். அடுத்த அர­சாங்­கத்தை அமைப்­பது தொடர்­பா­க­வும விரி­வாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது.

இது இவ்­வாறு இருக்க ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைக்­க­வென புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­படும் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நந்­தி­மித்ர ஏக்­க­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

அந்த புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் உள்­ள­டங்க வேண்­டிய விட­யங்கள் குறித்து ஆரா­யவே சந்­தி­ரிக்கா தலை­மை­யி­லான குழு ஆரா­ய­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.மிக முக்­கி­ய­மாக எதிர்­வரும் காலங்­களில் ஜெனீ­வாவில் இருந்து இலங்­கைக்கு விடுக்­கப்­படும் அழுத்­தங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கவே தேசிய அர­சாங்கம் ஒன்று அமைக்­கப்­ப­டு­வ­தா­கவும் நந்­தி­மித்ர ஏக்­க­நா­யக்க குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­நி­லையில் பொது கருத்­தொ­ரு­மை­மிக்க அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்கு அனைத்து அர­சியல் கட்­சி­களும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும் என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் சகல அர­சியல் கட்­சி­க­ளி­டமும் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார்.

நாட்­டுக்­கா­கவும், மக்­க­ளுக்­கா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் அனை­வரும் ஒன்­று­பட்டு இணக்­கப்­பாட்டு அர­சி­யலை முன்­னெ­டுப்போம் எனத் தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதற்­காக அர­சாங்­கத்­துடன் அனைத்து அர­சியல் கட்­சி­களும் இணைய வேண்­டு­மென்றும் பகி­ரங்­க­மாக வேண்­டுகொள் விடுத்தார்.

நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி 106 ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்­டது. எனினும் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு 113 ஆச­னங்கள் தேவை­யா­க­வுள்­ளது. எனினும் ஐக்­கிய தேசிய கட்சி கூடுதல் ஆச­னங்­களை பெற்­ற­மை­யினால் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக முடியும். அத்­துடன் 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் ஐக்­கிய தேசிய கட்­சிக்கே பிர­தமர் பத­வியை பெறு­வ­தற்கும் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கு­மான உரிமை காணப்­ப­டு­கின்­றது.

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 95 ஆச­னங்­க­ளையும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி 16 ஆச­னங்­க­ளையும் மக்கள் விடு­தலை முன்­னணி 6 ஆச­னங்­க­ளையும் பெற்றன. அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தலா ஆசனத்தை கைப்பற்றின.

தேர்தலுக்கு பின்னர் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிவந்தார். அத்துடன் கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இவ்வாறு எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரண்டாவது தடவையாக தேசிய அரசாங்கம் அமைக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் இவ்வருடம் பெப்ரவரி மாதம் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்து அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.