Breaking News

சம்பூர் மக்களுக்கு காணி பத்திரங்களை வழங்குவதற்கு நாளை வருகிறார் ஜனாதிபதி

சம்பூர் மக்­க­ளுக்கு நாளை சனிக்­கி­ழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் காணிப் பத்­தி­ரங்கள் கைய­ளிக்கப் படவுள்ளன. இவ் வைப­வத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா ­கு­மா­ர­துங்க ஆகி­யோரும் கலந்து கொள்­கின்­றனர்.

இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது;

சம்பூர் மக்­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக காணிப் பத்­தி­ரங்­களை கைய­ளித்து மீள்­கு­டி­யேற்­றத்தை ஆரம்­பித்து வைக்க வருகை தர­வி­ருக்­கிறார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன,

சனிக்கிழமை மாலை சம்­பூ­ருக்கு விஜயம் செய்­ய­வுள்ள ஜனா­தி­ப­தி­யுடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகி­யோ ரும் வருகை தர­வுள்­ளனர்.

சம்பூர் பத்­தி­ர­கா­ளி­யம்மன் ஆலய முன்­ற லில் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக சனிக்கிழமை மாலை சம்பூர் மக்­க­ளுக்­கான காணி உறு­திப்­பத்­திர கைய­ளிப்பு வைபவம் இடம்­பெ­ற­வுள்­ளது. 2006ஆம் ஆண்டு சம்பூர் மக்கள் குடி பெயர்ந்து அகதி முகாம்­களில் வாழ்ந்து வந்த நிலையில் சம்­பூரில் உள்ள 818 ஏக்கர் காணி­களும் முத­லீட்டு வல­யத்­துக்­கென வர்த்­த­மானி பிர­சு­ரத்தின் மூலம் சுவீ­க­ரிக்­கப்­பட்­ட­துடன் இன்­னு­மொரு வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் கேற்வே என்ற பல்­தே­சியக் கம்­ப­னிக்கு பொரு­ளா­தார வர்த்­தக வலய அபி­வி­ருத்­திக்­கென முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ 2012ஆம் ஆண்டு வர்த்­த­மானி பிர­க­ட­ன­மொன்றை செய்­தி­ருந் தார். இதற்கு எதி­ராக சம்பூர் மக்கள் ஏழு பேரினால் உயர் நீதி­மன்றில் வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

புதிய ஆட்சி மாற்றம் கார­ண­மாக, முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவி னால் செய்­யப்­பட்ட வர்த்­த­மானிப் பிர­க­ட­னங்­களை புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இரத்து செய்தார். இதற்கு எதி­ராக தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த தடை உத்­த­ரவு செல்­லு­ப­டி­யற்­றது என கடந்த ஆடி மாதம் உயர் நீதி­மன்றம் தீர்ப்பு வழங்­கி­யதைத் தொடர்ந்து சம்பூர் மக்­களின் மீள் குடி­யேற்றம் உறுதி செய்­யப்­பட்­டது.

பொதுத் தேர்தல் முடி­வு­களைத் தொட ர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலை வர் இரா. சம்­பந்தனினால் மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சியைத் தொடர்ந்து சம்பூர் மீள்­கு­டி­யேற்­றத்தை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நாளை சனிக்­கி­ழமை ஆரம்­பித்து வைப்­ப­தற்­கென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சம்­பூ­ருக்கு வருகை தர­வுள்ளார்.

இந்த வைப­வத்­துக்­கான பூர்வாங்க ஏற் பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் மற் றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என். புஷ்பகுமார ஆகியோர் மேற் கொண்டு வருகின்றனர். இதேவேளை சம்பூரில் உள்ள கடற்படை உயர் பாது காப்பு வலயத்திற்குட்பட்ட 217 ஏக்கர் நில மும் விரைவில் மக்களிடம் கையளிக்கப் படுமென எதிர்பார்க்கப்படுகிறது.