Breaking News

ஐ.நா.விசாரணை அறிக்கை குறித்து பீரிஸ் பொய்­யான தக­வல்­களை வெளி­யி­டுகிறார்

சிந்­துள்­ள­தாக கூறப்­படும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் இலங்கை குறித்த விசா­ரணை அறிக்கை தொடர்பில் முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பொய்­யான தக­வல்­களை வெளி­யி­டு­வ­தாக பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரி­வித்­துள்ளார்.

பிர­தி­ய­மைச்சர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:-

அவ்­வாறு எந்­த­வொரு அறிக்­கையும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அறிக்கை வெளி­யி­டப்­பட்­டி­ருந்தால் அதனை பொது மக்­க­ளுக்கு வெளி­யி­ட­வேண்­டி­யது ஜீ.எல். பீரிஸின் கட­மை­யாகும். முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் எவ்­வாறு இந்த அறிக்­கையை பெற்றார் என்று எங்­க­ளுக்குத் தெரி­ய­வில்லை. அவ­ரிடம் இந்த அறிக்கை இருக்­கு­மானால் அவர் அதனை உட­ன­டி­யாக ஊட­கங்­க­ளுக்கு வெளி­யி­ட­வேண்டும். அவர் அவ்­வாறு செய்­ய­வில்லை. அதனால் தான் அதனை வதந்தி என்­கிறோம். ஜீ.எல்.பீரிஸ் பொறுப்­புடன் நடந்து கொள்ள வேண்டும்.

மேலும் தேர்தல் காலத்தில் மக்­களை திசை திருப்பும் வகையில் இந்த முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்­டா­மென ஜீ.எல்.பீரி­ஸிடம் நாங்கள் கோரிக்கை விடு­கிறோம் என்றார்.கடந்த சனிக்­கி­ழமை கருத்து வெளி­யிட்­டி­ருந்த ஜீ.எல். பீரிஸ் புதிய அர­சாங்­கத்தின் உள்­ளக விசா­ர­ணை­யா­னது சர்­வ­தேச தலை­யீட்டைக் கொண்­டுள்­ளதா? என்ற சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ள­தாக கூறி­யி­ருந்தார்.கசி­ய­வி­டப்­பட்­டுள்ள ஐ.நா.வின் அறிக்­கை­யா­னது இந்த சர்­வ­தேச தொடர்பை கோடிட்­டுக்­காட்­டு­வ­தா­கவும் அவர் கூறி­யி­ருந்தார். அத்­துடன் இந்த விட­யத்தில் வட­மா­காண சபையும் சம்­பந்­தப்­ப­டு­வ­தாக ஜீ.எல். பீரிஸ் கூறி­யி­ருந்தார்.

”இந்த செயற்­பாட்டில் எவ்­வாறு வட­மா­கா­ண­சபை சம்­பந்­தப்­ப­ட­மு­டியும்? அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதா­வது வட­மா­கா­ண­ச­பை­யா­னது யுத்­தத்தின் போது யுத்தக் குற்றம் இடம் பெற்­ற­தா­கவும் இனப்­ப­டு­கொலை நடை­பெற்­ற­தா­கவும் கூறி­யுள்­ளது. அவ்­வா­றான ஒரு சபை­யிடம் உள்­ளக விசா­ரணை செயற்­பாட்டில் பங்­கெ­டுக்க வைக்க முடி­யுமா? என்று முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரி­வித்­தி­ருந்தார்.எவ்­வா­றெ­னினும் யுத்தம் சம்­பந்­த­மானமுழு­மை­யான செயற்பாட்டில் தமிழ்புலம்பெயர் அமைப்புக்களும், தமிழ்தேசி யக்கூட்டமைப்பும் சர்வதேச முகவர் நிறு வனங்களும் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.