Breaking News

மஹிந்தவின் கனவை மக்கள் மீண்டும் குப்பைத் தொட்டியில் போடுவார்கள் -ராஜித

மக்கள் இன்று தெளி­வாக இருக்­கி­றார்கள். அவர்­களை மீண்டும் ஏமாற்ற முடி­யாது. 

எனவே, மஹிந்த ராஜபக்ஷவி­னது கன­வை யும் அவ­ரது சகாக்­க­ளது எதிர்­பார்ப்­பு­க­ளையும் எதிர்­வரும் 17ஆம் திகதி மக்கள் மீண்டும் குப்பைத் தொட்­டியில் போட்டு ஐக்­கிய தேசிய முன்ன­ணியை அமோக வெற்­றி­பெறச் செய்­வார்கள் என அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் களுத் துறை மாவட்ட வேட்­பா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

வெள்ளைக் கொடி விவ­காரம், சர்­வ­தேச விசா­ரணை போன்ற விவ­கா­ரங்­க­ளையும் இன ­வா­தத்­தையும் கையி­லெ­டுத்துக் கொண்டு மஹிந்த அணி­யினர் இந்த தேர்­தலை எதிர்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர். மக்கள் ஒரு­போதும் இவர்­க­ளு­டைய அடிப்­ப­டை­யற்ற பிர­சா­ரத்தை ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை எனவும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி யில் எஞ்­சி­யி­ருக்கும் யதார்த்­த­வா­திகள் எதிர்வரும் தேர்­தலின் பின்னர் எம்­முடன் இணைந்து நல்­லாட்­சியில் கைகோர்த்துக் கொள்­­வார் கள் என்றும் அவர் கூறினார்.

வெள்­ளைக்­கொடி விவ­கா­ரத்தில் இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்வே ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சிக்­கின்­றது. நாட்­டையும் இரா­ணு­வத்­தையும் காப்­பாற்­று­வதில் ஐக்­கிய தேசியக் கட்சி அக்­க­றை­யின்றி செயற்­ப­டு­கின்­றது என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர் சுசில் பிரேம் ஜயந்த தெரி­வித்­தி­ருந்தார். இது­கு­றித்து கருத்து கேட்ட போதே அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்கு முதலில் யார் இணக்கம் தெரி­வித்­தார்கள் என்­ப­தையும் தருஸ்மன் அறிக்கை போன்­ற­வற்­றையும் சுசில் பிரேம்­ஜ­யந்த இன்று மறந்து விட்டார் போலும், தனக்கு கிடைத்­துள்ள பத­வியை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­காக இவ்­வாறு மன சாட்­சி­யில்­லாமல் இவர்கள் பேசு­கின்­றார்கள்.

தேர்தல் காலங்­களில் இவ்­வாறு பேசு­வதால் மக்­களை ஏமாற்றி வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­ளலாம் என்­பது இவர்­க­ளது எதிர்­பார்ப்பு. ஆனால் மக்கள் இவ்­வா­றான போலிப் பிர­சா­ரங்­க­ளையும் பொய்­யான தக­வல்­க­ளையும் நன்கு அறி­வார்கள். ஆகை­யி­னா­லேயே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மக்கள் தூக்கி எறிந்­தார்கள்.

இன்று மீண்டும் மக்­களை ஏமாற்றி பிர­த­ம­ராக வரு­வ­தற்கு மஹிந்த ராஜபக் ஷ கனவு காண்­கிறார். அவ­ரது சகாக்­களும் அவரின் நிழலில் தஞ்சம் புகுந்து தம்மைப் பாது­காத்துக் கொள்ள முயற்­சிக்­கி­றார்கள். அவற்­றுக்­கெல்லாம் தகுந்த பாடம் புகட்ட மக்கள் இன்று தயா­ரா­கி­யுள்­ளார்கள்.

நாட்டை பாது­காப்­பதில் எமக்கு மிகுந்த அக்­கறை இருக்­கி­றது. ஆகை­யி­னா­லேயே கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் எமது உயி­ரையும் பணையம் வைத்து மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ரா­கவும் அவ­ரது அரா­ஜக மற்றும் ஊழல் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரா­கவும் ஒன்­றி­ணைந்து நாட்டில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தினோம். அந்த மாற்­றத்தை நிலை நிறுத்­து­வதே இன்று எமது எதிர்­பார்ப்­பாகும்.

நாட்டை பாது­காப்­பதில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு அக்­க­றை­யில்லை எனறு கூறும் சுசில் பிரேம் ஜயந்த போன்றோர், இன்று மோசடிக் காரர்­க­ளையும் ஊழல் பேர்­வ­ழி­க­ளையும் பாது­காப்­ப­தி­லேயே அக்­கறை செலுத்தி வரு­கின்­றார்கள். அவற்­றை­யெல்லாம் மக்கள் நன்கு அறிந்து வைத்­துள்­ளார்கள்.

மஹிந்த ராஜபக் ஷவி­னு­டைய இன­வாதப் பேச்­சுக்­களும் சுசில் பிரேம் ஜயந்த அதே போன்­ற­வர்­க­ளது போலிப் பிர­சா­ரங்­களும் மக்கள் மத்­தியில் இனி எடு­படப் போவ­தில்லை. எனவே, அவர்களது பக்கத்தில் இருக்கும் சொற்பமான யதார்த்தவாதிகளும் நேர்மையானவர்களும் எம்முடன் வந்து இணைந்து கொள்ளலாம். நாம் நாட்டின் மீதும் நாட்டுமக்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என்பதுடன் ஜனநாயகத்தையும் மக்கள் ஆணையையும் பெரிதும் மதிப்பவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.