இந்திய மீனவர்கள் 16 பேர் கைது
இந்திய மீனவர்கள் 16 பேரை யாழ். பருத்தித்துறை கட்டைக்காடு கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வள த்துறை உதவிப்பணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இந்திய தமிழகம் பகுதியைச்சேர்ந்த மீனவர்கள் 16 பேர் 3 ரோலர் படகுகளில் கட்டைக்காடு கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை இரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போதே கட்டைக்காடு பகுதி கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அம் மீனவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.