Breaking News

அதிகாரத்தை தக்கவைப்பதற்காகவே அமைச்சரவையை அதிகரித்துள்ளனர்! ஜே.வி.பி. குற்றச்சாட்டு

அர­சியலமைப்­பிற்கு முர­ணான வகையில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் செயற்­ப­டு­வ­தா­கவும் புதிய அர­சாங்­கத்தில் அமை­யப்­பெற்­றி­ருக்கும் அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை அதி­க­ரித் துள்­ள­மைக்கு தாம் கடு­மை­யான எதிர்ப்பை தெரி­விப்­ப­தா­கவும் மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.

தமது அதி­கா­ரங்­களை தக்­க­வைத்­துக்­கொள்ளும் ஒரே நோக்­கத்­தி­லேயே ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் அமைச்­ச­ர­வையின் எண்­ணி­கையை அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் அக் கட்சி குற்றம் சுமத்­தி­யது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னரால் நேற்று கொழும்பில் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே கட்­சியின் தலை­வரும் எதிர்க்­கட்சியின் பிர­தம கொற­டா­வு­மான அனு­ர­கு­மார திசா­நா­யக மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

இப்­போது அமைந்­தி­ருக்கும் அர­சாங்­கத்தை தேசிய அர­சாங்கம் என தெரி­விக்­கின்­றனர். ஆனால் இந்த அர­சாங்கம் தேசிய அர­சாங்கம் அல்ல. இது ஒரு கூட்டு அர­சாங்­க­மாகும். பொதுத் தேர்­தலின் போது அதிக ஆச­னங்­களை பெற்ற கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சியும் இரண்­டா­வது பெரும்­பான்­மையைப் பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசும் இணைந்து அமை­யப்­பெற்­றுள்ள ஒரு கூட்டு ஆட்சி மட்­டு­மே­யாகும். ஆகவே இதை தேசிய அர­சாங்கம் என ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அமைச்­சுப்­ப­த­வி­க­ளையும் சலு­கை­க­ளையும் எதிர்­பார்க்கும் நபர்­களை வைத்­துக்­கொண்டு ஆட்சி அமைப்­பதை எம்மால் தேசிய அர­சாங்கம் என தெரி­விக்க முடி­யாது.

மேலும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆரம்­பத்தில் இருந்தே தாம் தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தா­கவும், கூட்டு ஆட்­சி­யொன்றை உரு­வாக்­கு­வ­தா­கவும் தெரி­வித்­தது. ஆகவே அவர்­களை எம்மால் விமர்­சிக்க முடி­யாது. ஆயினும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்ட­மைப்பின் சார்பில் இன்று அமை­ச்சர்களாக செயற்­ப­ட­வுள்ள நபர்கள் அவ்­வாறு அல்ல. ஆரம்­பத்தில் இருந்தே அவர்கள் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தனி ஆட்­சியை அமைப்­ப­தா­கவும், ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் ஒரு சந்­தர்ப்­ப­தி­லேனும் கைகோர்க்க போவ­தில்லை எனவும் குறிப்­பிட்டனர். ஆனால் அவர்கள் இன்று முகங்­க­ளுக்கு முக­மூ­டி­களை மாட்­டிக்­கொண்டு அமைச்­சுப்­ப­த­விக்­காக ஒன்று சேர்ந்­துள்­ளனர். மக்­களை ஏமாற்றி வாக்­கு­களை பெற்­று­விட்டு இன்று மக்­களின் எதிர்­பார்­ப்க்பு­களை முழு­மை­யாக மிதிக்கும் வகையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி செயற்ப்­பட்டு வரு­கின்­றது.

அதேபோல் தேசிய அர­சாங்கம் அமையும் பட்­சத்தில் அதில் அமைச்சுப் பத­வி­களை அதி­க­ரிப்­பதில் எந்த சிக்­கலும் இல்லை. தேவைக்­கேற்ப அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை அதிகரித்துக்­கொள்ள முடியும். ஆனால் கூட்டு அர­சாங்­கத்தில் அமைச்­சர்­களின் எண்­ணிக்­ககை அதி­க­ரிக்க முடி­யாது. அர­சியலமைப்பின் விதி­மு­றைக்கு அமைய இது முர­ணான விட­ய­மாகும்.

 கடந்த ஜன­வரி மாதம் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட்­டது வெறு­மனே மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்த மட்­டு­மல்ல. அவ­ரது ஆட்­சியில் அமைக்­கப்­பட்ட அமைச்­ச­ரவை, அவர்­க­ளது கொள்­கைகள் மற்றும் மஹிந்த ஆட்­சியின் வேலைத்­திட்­டங்­க­ளையும் சேர்த்தே தோற்­க­டித்­தனர். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் இரவு விடியும் போது புதிய அமைச்­சுப்­ப­தவி உரு­வா­கிய நிலைமை இருந்­தது. ஆகவே அவற்­றையும் முழு­மை­யாக தடுக்கும் வகை­யி­லேயே மஹிந்த ராஜபக் ஷவின் தனி சாம்­ரா­ஜிய ஆட்­சியை மக்கள் வீழ்த்­தினர்.

எனினும் இப்­போது அமை­யப்­பெற்­றி­ருக்கும் கூட்டு ஆட்­சியில் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அதே அர­சியல் கலா­சாரம் பல­ம­டைந்து வரு­கின்­றது. ஆதி­கா­ரத்தை தக்­க­வைக்கும் ஒரே நோக்­கத்தில் மஹிந்த ராஜபக் ஷ எவ்­வாறு அமைச்­சுப்­ப­த­வி­களை அதி­க­ரித்து அர­சாங்­கத்தை தக்­க­வைத்­தாரோ அதே செயற்­பாட்டை புதிய அர­சாங்­கமும் கையாள்­கின்­றது. ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது அதிகாரங்களை தக்கவைக்கும் ஒரே நோக்கத்தில் அமைச்சுப்பதவிகளை அதிகரித்து அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் செயற்படுகின்றனர். ஆகவே இதை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். அதேபோல் பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சியின் சார்பில் எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றார்.