Breaking News

எதிர்க்­கட்சிப் பத­வியை பயன்­ப­டுத்தி சர்­வ­தேச விசா­ர­ணையை முன்­னெ­டுக்­க­ வேண்டும்! சிவா­ஜி­லிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு கிடைக்­கப்­பெற்­றுள்ள எதிர்க்­கட்சி பத­வியைப் பயன்­ப­டுத்தி சர்­வ­தேச விசா­ர­ணையை முன்­னெ­டுக்­க­வேண்­டு­மென தெரி­வித்த வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் இதன்­மூ­லமே தமிழ் மக்­க­ளு­டைய நீண்­ட­கால இனப் பிரச்­சி­னை­க்கு நிரந்­தரத் தீர்­வி­னைப்­பெற்றுக் கொள்­ள­ மு­டியும் என்றார்.

நேற்­றையதினம் யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இலங்கைப் பாரா­ளு­மன்ற எதிர்க்­கட்சித் தலை­வ­ராக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வா­கி­யுள்­ள­துடன் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதித் தலை­வ­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகியோர் தெரிவுசெய்­யப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் குறித்த பத­வி­களின் மூலம் என்ன செய்­யப்­போ­கின்­றார்கள் அதை எவ்­வாறு பயன்­ப­டுத்தப் போகின்­றார்கள் என்­ப­து­ தொ­டர்­பிலே அதன் முக்­கி­யத்­துவம் தங்­கி­யுள்­ளது.

குறிப்­பாக எதிர்க்­கட்சித் தலைவர் பத­வி­யி­னூ­டாக இலங்­கை­யி­லுள்ள பொது­வான பிரச்­சி­னையை எடுத்­து­ரைக்க அதி­காரம் உள்­ளது. இந்­நி­லையில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தரத் தீர்வு ஒன்­றைப்­பெற்­றுக்­கொள்­ளத்­தக்க வகையில் அந்தப் பத­வி பயன்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

அதா­வது பாரா­ளு­மன்­றத்­தேர்­ தலில் மக்கள் வழங்­கிய ஆணை க்கு அமைய சர்­வ­தேச மத்­திய ஸ்­தத்­துடன் இடம்­பெறும் சர்­வ­தேச விசா­ர­ணயை மேற்­கொண்டு தமிழ் மக்­க­ளுக்கு நீதி­யையும் நிரந்­தரத் தீர்­வையும் பெற்றுக் கொடுக்க எதிக்­கட்சி தலைவர் பத­வியை பயன்­ப­டுத்த வேண்டும்.

மேலும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதித் தலைவர் பதவி என்­பது ஆளும் கட்­சிக்­கு­ரி­ய­தல்ல. அத்­த­கைய பத­வியில் இருப்­பவர் எதிர்க்­கட்சி வரி­சையில் அமர்ந்து உரை­யாற்­றலாம். அர­சாங்­கத்தின் பிழை­யான செயற்­பா­டுகள் தொடர்பில் எதி­ராகக் குரல் கொடுக்­கலாம், வாக்­க­ளிக்­கலாம்.

இத்­த­கைய முக்­கி­யத்­துவம் வாய்ந்த பத­வி­களைப் பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அத­னூ­டாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த தீர்வுத்திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை எடுக்க வேண்டும். எனவே பதவிகளைப் பெற்றுக்கொள்வது முக்கியமல்ல, அவற்றை எவ்வாறு பயன்படுத்துகின் றோம் என்பதிலேயே அதன் முக்கியத்துவம் வெளிப் படும் என்றார்.