Breaking News

விரைவில் தீர்வுத் திட்டத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர்! வலியுறுத்துகிறது கூட்டமைப்பு

மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று திகளுக்கு அமைய தேசிய அர­சாங் கம் ஒன்றை அமைத்­த­மைக்கு தமது வாழ்த்­து­களை தெரி­விப்­ப­தாக பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­தது. 

இந்த தேசிய அர­சாங்­கத்­தி­லா­வது தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்­றுத்­தர வேண்டும் எனவும் அக் கட்சி வலி­யு­றுத்­தி­யது. ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஆத­ரவில் நேற்று தேசிய அர­சாங்கத்தின் அமைச்சரவை பதவி

யேற்ற நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கருத்து வெளியிடுகையிலேயே அதன் ஊடகப் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

அமை­யப்­பெற்­றுள்ள தேசிய அர­சாங்கம் தொடர்பில் எதிர்க்­கட்சி என்ற வகையில் நாம் எமது வாழ்த்­துக்­களை தெரி­விக்­கின்றோம். கடந்த காலத்தில் மக்­க­ளுக்கு கொடுத்­தி­ருந்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய இப்­போதும் ஒரு கூட்டு அர­சாங்கம் அமை­யப்­பெற்­றுள்­ளது.

ஆகவே அதில் நாட்டின் நலன் கரு­திய செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும். தமிழ் சிங்­கள முஸ்லிம் மக்­களின் தேவை­க­ளையும், நலன்­க­ளையும் கருத்தில் கொண்டு இந்த புதிய அர­சாங்கம் செயற்ப்­பட வேண்டும். நாட்­டுக்கும் மூவின மக்­க­ளுக்கும் நன்மை தரக்­கூ­டிய வகையில் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் செயற்­பா­டு­களை நாம் ஆத­ரிப்போம். அதேபோல் எதிர்க்­கட்சி என்ற வகையில் நாட்­டுக்கு தேவை­யான கருத்­துக்­களை நாம் முன்­வைப்போம்.

எனினும் நாம் இந்த தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­சர்­களின் எண்­ணிக்­கைக்கு எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­கின்றோம். பாரா­ளு­மன்­றத்­திலும் நாம் இந்த விட­யத்தை சுட்­டிக்­காட்­டினோம். எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் இந்த அர­சாங்­கத்தின் அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­பதை ஆதரிக்கவில்லைவில்லை என வெளிப்­ப­டை­யாக தெரி­வித்­தி­ருந்தார்.

அதே நிலைப்­பாடே இப்­போதும் உள்­ளது. இந்த தேசிய அர­சாங்­கத்தில் அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை அள­வுக்கு அதி­க­மாக அதி­க­ரிப்­பதை அவ­சி­ய­மற்ற ஒன்­றா­கவே கரு­து­கின்றோம். நாட்டில் குறைந்த அமைச்­ச­ர­வையை கொண்ட நாடுகள் சிறப்­பாக செயற்­ப­டு­கின்­ற­மைக்கு பல உதா­ர­ண­களை முன்­வைக்க முடியும். ஆகவே அதை அர­சாங்கம் தெளி­வாக விளங்­கிக்­கொள்ள வேண்டும். எனினும் ஏனைய விட­யங்­களில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை நாம் வர­வேற்போம். கூட்டு அர­சாங்கம் இன்று உத்­தி­யோக பூர்­வ­மாக அமைந்­துள்­ளது. அதற்கு எமது வாழ்த்­துக்­களை தெரி­விக்­கின்றோம்.

மேலும் இந்த நாட்டில் இன்னும் தீர்க்க வேண்­டிய தேசியப் பிரச்­சி­னைகள் பல உள்­ளன. குறிப்­பாக தமிழ் மக்­களின் நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை பெற்­றுக்­கொள்ள வேண்­டுய அவ­சியம் உள்­ளது. அதுவும் விரைவில் ஒரு தீர்வு வேண்டும் என்றே நாம் எதிர்ப்பார்க்கின்றோம். ஆகவே அமையப்பெற்றுள்ள தேசிய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் இந்த அரசாங்கத்துக்கு வலியுறுத்துகின்றோம் என்றார்.