Breaking News

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவே தேசிய அரசாங்கம்! ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகிறார் பிரதமர்

நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கே தேசிய அர­சாங் கம் நிறு­வப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச சவால்­களை வெற்றிகொள்­வ­தற்கும் நாட்டை முழு­மை­யாக மாற்­றி­ய­மைப்­ப­தற்கும் அனைத்து தரப்பின ரும் தேசிய அர­சாங்­கத்­துடன் ஒன்­றி­ ணை­ய வேண்டுமென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்தார்.

முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சாங்­க­மாக மாற்­றி­ய­மைக்­க­வுள் ளோம். இதற்­காக குழுக்கள் நிறு­வப்­ப­ட­வுள்­ளன. இத­னூ­டா­கவே நிர்­வாகம் முன்­னெ­டுக்­கப்­படும் என் றும் அவர் குறிப்­பிட்டார்.ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று நடைபெற்ற தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிரதமர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

வர­லாற்று சிறப்­பு­மிக்க நாளில் நாம் இன்று காலடி எடுத்­து­வைத்­துள்ளோம். நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வற்கு இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­களும் ஒன்­றி­னைந்­துள்­ளன. இது­வரை காலமும் தீர்க்க முடி­யாத அடிப்­படை பிரச்­சி­னை­களை நாம் தீர்க்க வேண்­டி­யுள்­ளது. நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு உரிய வகையில் தீர்வு காண்­ப­தற்­கா­கவே தேசிய அர­சாங்கம் நிறு­வப்­பட்­டுள்­ளது. 30 வரு­ட­கால யுத்­ததின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் நாட்டு மக்­க­ளி­டையே புரிந்­து­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் தற்­போது சர்­வ­தேச ரீதி­யாக இலங்­கைக்கு எதி­ராக பல்­வேறு நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. சர்­வ­தேச பிரச்­சி­னை­க­ளுக்கு நாம் சரி­யான முறையில் முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது. தற்­போது சர்­வ­தேச நாடு­க­ளி­லி­ருந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு ஆத­ரவு கிடைத்த வண்ணம் உள்­ளன.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் நாட்டின் முக்­கிய பிரச்­சி­னைக்கு தேசிய அர­சாங்­கத்­தினால் தீர்வு காண­மு­டியும். ஆகவே நாட்டின் முக்­கிய பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தனை பிர­தான குறி­கோ­ளாக வைத்து ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்கு அனைத்து அர­சியல் கட்­சி­களும் தேசிய அர­சாங்கம் அமைக்க முன்­வர வேண்டும்.

இதனை மைய­மாக கொண்டு முழு பாரா­ளு­மன்­றத்­தையும் நாம் அர­சாங்­க­மாக்­கு­வ­தற்கு நாம் திட்­ட­மிட்­டுள்ளோம். இதற்­காக பாரா­ளு­மன்ற குழுக்களை நிறுவி அத­னூ­டாக எமது நிர்­வா­கத்தை நாம் கொண்டு செல்லவுள்ளோம்.

இந்நிலையில் நாட்டை முழுமையாக நாம் மாற்றியமைக்க வேண்டும். இதனை சரியான முறையில் நேரத்தியாக முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினர்களும் எம்முடன் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும் என்றார்.