Breaking News

பரணகம, உடலாகம அறிக்கைகள் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில்! 22,23 இல் ஐ.நா.பிரேரணை குறித்து விவாதம்

எதிர்­வரும் 20 ஆம் திகதி பாரா­ளு­மன்றக்கூட்டத் தொட­ரின்­போது உடலாகம ஆணைக்குழு மற்றும் பர­ணகம ஆணைக்குழு ஆகி­ய­வற்றின் அறிக்­கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் என பிர­தமர் ரணில்­ விக்­கி­ரம சிங்க நேற்று வெள்ளிக்­கி­ழமை சபை யில் தெரி­வித்தார்.

இதன் பின்னர் மேற்­படி அறிக்­கைகள் தொடர்­பிலும் ஐ.நா.வின் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் குறித்தும் விவாதம் நடத்­தப்­படும் என்றும் பிர­தமர் குறிப்பிட்டார்.

பாரா­ளு­மன்றம் நேற்று முற்­பகல் 1.30 மணிக்கு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. இதன்­போது சபா­நா­யகர் அறி­விப்பு மற்றும் பிரே­ரணைத் தாக்கல் ஆகி­ய­ன முடி­வ­டைந்த பின்னர். கட்சித் தலை­வர்­களால் எடுக்­கப்­பட்ட தீர்­மானம் தொடர்­பாக பிர­தமர் சபையில் கருத்து வெளி­யிட்டார்.

சபையில் பிர­தமர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மானம் தொடர்பில் விவாதம் நடத்­து­வ­தற்கு திகதி வழங்­கு­மாறு நேற்­று­முன்­தினம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. உத­லா­கம ஆணைக்­குழு அறிக்கை, பர­ணா­கம ஆணைக்­கு­ழுவின் அறிக்கை ஆகி­ய­வற்றை பாரா­ளு­மன்­றத்தில் சமர்­ப்பிக்­க­வுள்ளோம். இவற்­றுடன் சேர்த்து ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் தொடர்­பிலும் விவா­திக்க முடியும்.

மேற்­படி அறிக்­கைகள் அடுத்த பாரா­ளு­மன்ற கூட்டத் தொடரில் சமர்­ப்பிக்க முடியும்.வியா­ழக்­கி­ழமை, வெள்ளிக்­கி­ழமை இரு தினங்­களில் விவா­தத்­திற்கு எடுக்க முடியும். இரு அறிக்­கை­களும் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இருக்­கின்­றன. அவை ஆங்­கில மொழி­யி­லேயே உள்­ளன. மொழி­பெ­யர்க்­கப்­ப­ட­வில்லை.

அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் ஆங்கில மொழியிலான அறிக்கை சமர்பிக்க கூடியதாக இருக்கும் என்றார்.